முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
---------------------------------------------------------------------
கொழும்பில் நாளை (10) நடைபெறவிருந்த கல்முனை தொடர்பான கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என்னிடம் தெரிவித்தார். அத்துடன் கூட்டத்தை நடத்துவதற்கான அடுத்த திகதி தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களை நான் தொடர்பு கொண்டு கேட்ட போது, “நாளை நடைபெறவிருந்த கூட்டத்துக்கான அழைப்பு தனக்கு கிடைக்கவில்லை. இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் சம்பந்தன் ஐயாவே மேற்கொள்கிறார்” எனத் தெரிவித்தார்.
சம்பந்தன் ஐயாவுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது தொலைபேசி செயற்படவில்லை.
இருப்பினும் உள்ளூராட்சி மன்ற வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான முக்கியமான கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் நாளை ஞாயிற்றுக்கிழமை திருமலை செல்கிறார் என்ற உறுதியான தகவல் எனக்குக் கிடைத்தது. –ஏ.எச்.சித்தீ காரியப்பர்
Comments
Post a comment