முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் முதற்டவையாக ஒரு கட்சியின் செயலாளரான தன்னை, கொழும்பு மேயர் வேட்பாளராக நிறுத்தியுள்ளமை சிறப்புக்குரியது என ஆசாத் சாலி குறிப்பிட்டார்.
அவர் இதுபற்றி மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி மற்றும் சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் பூரண சம்மத்துடன் நான் நுஆ கட்சியின் செயலாளர் என்றவகையிலும், மூவின மக்களின் ஆதரவைப் பெற்றவன் என்ற வகையிலும் மேயர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறேன்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் கலப்புமுறை என்பதால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விட்டு மேயர் பதவியை என்னால் ஜெயிக்கமுடியும். ரோசி சேனநாயக்காவுக்கு கிறிஸ்த்தவ வாக்குகள் விழும். எனினும் எனக்கு மூவின மக்களின் வாக்குகளும் கிடைக்கும். அதனால் என்னால் கொழும்பு மேயர் வேட்பாளராக ஜெயிக்க முடியும் என்றார்.
Comments
Post a comment