ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம் அஸ்ரப் வித்தியாலய மாணவர்களின் பரிசளிப்பு வைபகமும் பெற்றோர்கள் சந்திப்பும்
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம் அஸ்ரப் வித்தியாலய மாணவர்களின் பரிசளிப்பு வைபகமும் பெற்றோர்கள் சந்திப்பும் இன்று பாடசாலை அதிபர் எம்.ஐ. எம் இல்யாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியும் சாய்ந்தமருது மறுமலர்சசி மன்ற தலைவருமான ஜப்பார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய,மாகாண,மாவட்ட ,வலய , கோட்ட மட்டங்களில் சாதித்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் சில பெற்றோர்களுக்கும் கௌரவ பரிசில்கள் சில பிரதம அதிதியால் வழங்கி வைக்கப்பட்டது.
-கலைமகன்-
Comments
Post a comment