ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
அம்பாறை, அக்கரைப்பற்று விவசாயிகளுக்குச் சொந்தமான, வட்டமடுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 1,400 ஏக்கர் விவசாயக் காணிகளில் விவசாயம் செய்வதைத் தடுத்துவரும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக இன்று திங்கட்கிழமை (27) அக்கரைப்பற்றில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
மேற்படி ஹர்தாலுக்கான அழைப்பை வட்டமடு பிரதேசத்தின் நான்கு விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து விடுத்திருந்தன.
மேற்கொள்ளப்பட்டு வரும் ஹர்த்தாலுடன் கடைகள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டிருந்த அதேவேளை, போக்குவரத்து சேவைக்கு எந்தவித தடங்கலும் ஏற்படாமல் வழமை போன்று இடம்பெற்றது.
வங்கிகள், பாடசாலைகள், அரச திணைக்களினதும் வழமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வட்டமடு விவசாயிகள், தமது காணிகளில் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு தெரிவித்துக் கடந்த வாரம் முதல் ஆர்ப்பாட்டங்களையும் வீதிமறியல் போராட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்திவருகின்ற நிலையில், இன்று ஹர்தால் கடையடைப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
Comments
Post a comment