அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
அம்பாறை, அக்கரைப்பற்று விவசாயிகளுக்குச் சொந்தமான, வட்டமடுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 1,400 ஏக்கர் விவசாயக் காணிகளில் விவசாயம் செய்வதைத் தடுத்துவரும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக இன்று திங்கட்கிழமை (27) அக்கரைப்பற்றில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
மேற்படி ஹர்தாலுக்கான அழைப்பை வட்டமடு பிரதேசத்தின் நான்கு விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து விடுத்திருந்தன.
மேற்கொள்ளப்பட்டு வரும் ஹர்த்தாலுடன் கடைகள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டிருந்த அதேவேளை, போக்குவரத்து சேவைக்கு எந்தவித தடங்கலும் ஏற்படாமல் வழமை போன்று இடம்பெற்றது.
வங்கிகள், பாடசாலைகள், அரச திணைக்களினதும் வழமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வட்டமடு விவசாயிகள், தமது காணிகளில் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு தெரிவித்துக் கடந்த வாரம் முதல் ஆர்ப்பாட்டங்களையும் வீதிமறியல் போராட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்திவருகின்ற நிலையில், இன்று ஹர்தால் கடையடைப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
Comments
Post a comment