அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
வெள்ளிக்கிழமை ஜும் ஆ நாளில் குத்பா நிகழ்த்தப்படுவது என்பது வெறுமனே ஒரு பிரச்சாரமாக மட்டும் கருதப்பட்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்றல்ல. குத்பா என்பது பிரச்சாரம் மற்றும் வணக்கமாகும். குத்பாவில் என்ன பேசப்பட வேண்டும் என நபியவர்களால் வரையறுக்கப்படவில்லை. மாறாக குத்பா எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என வரையறை வகுத்துள்ளார்கள்.
ஒருவரின் குத்பா சுருக்கமாகவும் தொழுகை நீளமாகவும் இருந்தால் அது அவரது அறிவைக்காட்டும் என நபிகளார் சொல்லியுள்ளனர்.
அதே போல் குத்பாவுக்காக இமாம் மிம்பரில் ஏறுமுன் பள்ளிக்கு சமூகமளிப்பவருக்கு விசேட நன்மை கிடைப்பதாகவும் சொல்லியுள்ளனர். குத்பாவின் போது மவுனம் காத்தலும் அவசியமாக்கப்பட்டுள்ளது.
இன்று இவற்றை கருத்திற்கொள்ளாமல் குத்பாக்கள் அதிக நேரமெடுப்பதால் மக்கள் தாமதமாக வர பழகி விட்டனர். 9 மணிக்கு பஸ் பயணிக்கும் என அறிவித்தல் கொடுத்தும் கடைசிப்பயணி 10 மணிக்கு வருவாரென்றால் அது வரை காத்திருக்கும் கொழும்பு கல்முனை தனியார் பஸ் போன்று குத்பாக்கள் ஆகிவிட்டன. நேர காலத்துடன் வந்தவன் பஸ்ஸுக்குள் வியர்க்க வியர்க்க இருப்பது போன்றுதான் இமாம் மிம்பரில் ஏறுமுன் வந்த தொழுகையாளியின் நிலை. குத்பாவின் மவுனம் காத்தல் என்பது குறட்டை சத்தம் கேட்பதாக ஆகிவிட்டது. பல குத்பாக்கள் ஏதோ சண்டைக்கு மக்களை அழைப்பது போன்று இரைச்சல் ஆகி விட்டன.
எனவே தான் குத்பாக்கள் 15 நிமிடங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என உலமா கட்சி அடிக்கடி சொல்லி வருகிறது.
Mubarak Moulavi
ஒருவரின் குத்பா சுருக்கமாகவும் தொழுகை நீளமாகவும் இருந்தால் அது அவரது அறிவைக்காட்டும் என நபிகளார் சொல்லியுள்ளனர்.
அதே போல் குத்பாவுக்காக இமாம் மிம்பரில் ஏறுமுன் பள்ளிக்கு சமூகமளிப்பவருக்கு விசேட நன்மை கிடைப்பதாகவும் சொல்லியுள்ளனர். குத்பாவின் போது மவுனம் காத்தலும் அவசியமாக்கப்பட்டுள்ளது.
இன்று இவற்றை கருத்திற்கொள்ளாமல் குத்பாக்கள் அதிக நேரமெடுப்பதால் மக்கள் தாமதமாக வர பழகி விட்டனர். 9 மணிக்கு பஸ் பயணிக்கும் என அறிவித்தல் கொடுத்தும் கடைசிப்பயணி 10 மணிக்கு வருவாரென்றால் அது வரை காத்திருக்கும் கொழும்பு கல்முனை தனியார் பஸ் போன்று குத்பாக்கள் ஆகிவிட்டன. நேர காலத்துடன் வந்தவன் பஸ்ஸுக்குள் வியர்க்க வியர்க்க இருப்பது போன்றுதான் இமாம் மிம்பரில் ஏறுமுன் வந்த தொழுகையாளியின் நிலை. குத்பாவின் மவுனம் காத்தல் என்பது குறட்டை சத்தம் கேட்பதாக ஆகிவிட்டது. பல குத்பாக்கள் ஏதோ சண்டைக்கு மக்களை அழைப்பது போன்று இரைச்சல் ஆகி விட்டன.
எனவே தான் குத்பாக்கள் 15 நிமிடங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என உலமா கட்சி அடிக்கடி சொல்லி வருகிறது.
Mubarak Moulavi
Comments
Post a comment