ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
Breaking: வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை. நீதிமன்றம் உத்தரவு,
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறத்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 6ம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும். இதன் காரணமாக எதிர்வரும் ஜனவரியில் இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்படுத்தப் படும் என எதிர்பார்க்கபடுகிறது.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறத்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 6ம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும். இதன் காரணமாக எதிர்வரும் ஜனவரியில் இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்படுத்தப் படும் என எதிர்பார்க்கபடுகிறது.
Comments
Post a comment