முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
சாய்ந்தமருதில் மாபெரும் மனிதசங்கிலிப் போராட்டமும் இளைஞர் மாநாடும்!!
எம்.வை.அமீர் -- யூ.கே. காலித்தீன்
சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை பெறுவதற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டங்களின் மற்றுமொரு வடிவமாக இன்று (11) மாபெரும் மனிதசங்கிலிப் போராட்டமும் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள "மக்கள் பணிமனையில்" இளைஞர்களுக்கான மாநாடும் உள்ளுராட்சி மன்றத்தை நோக்கிய பயனத்திம் முன்னணி செயற்பாட்டாளர் ஏ.ஆர்.எம். அஸீம் தலைமையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை பெறுவதற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டங்களின் மற்றுமொரு வடிவமாக இன்று (11) மாபெரும் மனிதசங்கிலிப் போராட்டமும் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள "மக்கள் பணிமனையில்" இளைஞர்களுக்கான மாநாடும் உள்ளுராட்சி மன்றத்தை நோக்கிய பயனத்திம் முன்னணி செயற்பாட்டாளர் ஏ.ஆர்.எம். அஸீம் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. பீர்முஹம்மட், முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஐ.எம்.சதாத், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எப்.எம்.தில்சாத், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். தில்சாத் ஆகியோர் உரையாற்றினார்.
இறுதியில், இளைஞர்களும் பொதுமக்களும் கைகோர்த்து, சாய்ந்தமருது நகர மத்தியில் பாரிய மனிதசங்கிலிப் போராட்டம்ஒன்றையும் முன்னெடுத்தனர்.
Comments
Post a comment