වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
( மினுவாங்கொடை நிருபர் )
அச்சு, இலத்திரனியல் மற்றும் இணையத்தள நிறுவனங்களின் ஊடாக நியமிக்கப்பட்டு, நாடளாவியரீதியில் செய்திகள் சேகரிக்கும் சகல பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் தற்போது 2018 ஆம் ஆண்டுக்கான சிறப்பு ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊடக மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்திட்டத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள இச்சிறப்பு நடவடிக்கை, அனைத்து பிரதேச ஊடகவியலாளர்களையும் கெளரவப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் சுதர்சன குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் அச்சக, இலத்திரனியல், இணையத்தள ஊடக நிறுவனங்களில் கடமை புரியும் அலுவலக ஊடகவியலாளர்களுக்கு "ஊடகவியலாளர்" என்றும், பிரதேச ரீதியாக செய்திகளைச் சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு "பிரதேச ஊடகவியலாளர்" என்றும் மாத்திரமே தகவல் திணைக்களத்தினால் ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், பிரதேச ஊடகவியலாளர்களுக்கு மதிப்பளித்து, அவர்களையும் கெளரவப்படுத்தும் நோக்கில் எவ்வித வேறுபாடுகளுமின்றி இச்சிறப்பு ஊடக அடையாள அட்டைகள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச ஊடகவியலாளர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான சிறப்பு அடையாள அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள், தற்போது திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால், பிரதேச ஊடகவியலாளர்கள் தாம் சேவையாற்றும் அச்சு, இலத்திரனியல் அல்லது இணையத்தளம் ஆகியவற்றின் ஏதாவது ஒரு ஊடக நிறுவனத்தின் ஆசிரியர் (Editor) ஊடாக அத்தாட்சிப்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்ட விண்ணப்பம் ஒன்றினை தகவல் திணைக்களத்திற்கு சமர்ப்பிப்பதன் மூலம் சிறப்பு ஊடக அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவர் எத்தனை ஊடக நிறுவனங்களின் கீழ் செய்திகள் சேகரித்தாலும், ஒருவருக்கு ஏதாவதொரு ஊடக நிறுவனத்தின் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்களை நேரில் கொண்டுவந்து கையளிக்கவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ அனுப்பிவைக்க முடியும் என்றும் பிரதேச ஊடகவியலாளர்கள் தகவல் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Comments
Post a comment