முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
மெட்றோ)
சிறுமியை அரசமரத்தின் கீழ் அழைத்துச்சென்று துஷ்பிரயோக முயற்சி:பிணையில் விடுவிக்கப்பட்ட விகாராதிபதி விகாரைக்கு சென்றபோது மக்கள் ஆர்ப்பாட்டத்தினால் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார்
கம்பளை குறுந்து வத்தை பிரதேசத்தில் சமய வகுப்புக்குச் சென்ற சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த விகாராதிபதிக்கு எதிராக நேற்று குறுந்து வத்த நகரில் பிரதேச வாசிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் கம்பளை குறுந்துவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழுவல விகாரையின் விஹாராதிபதி சமய வகுப்புக்குச் சென்ற சிறுமி ஒருவரை அங்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அரச மரத்துக்குப் பின்புறமாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சி செய்த சம்பவத்தையடுத்து குறுந்துவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட தையடுத்து குறித்த பிக்கு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இச்சந்தர்ப்பத்தில் ஊர்மக்கள் இணைந்து குறித்த விகாரையை பூட்டு போட்டு பூட்டியிருந்த நிலையில் பிணையில் விடுதலையாகி வெளியில் வந்த குறித்த பிக்கு மீண்டும் விகாரைக்கு வந்து பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்துக் கொண்டு விகாரைக்குள் சென்றுள்ளார்.
இதன்போது ஒன்றுகூடிய மக்கள் உடனடியாக பிக்கு வெளியேற வேண்டுமெனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து குறுந்துவத்தை பொலிஸார் ஸ்தலத்துக்குச் சென்று குறித்த பிக்குவை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றதையடுத்து ஊர்மக்கள் களைந்துசென்றனர்.
Comments
Post a comment