ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
.
கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை சொந்த மாகாணங்களில் நியமியுங்கள்
அகிலவிராஜை நேரில் சந்தித்து றிஷாட் எடுத்துரைப்பு
ஊடகப்பிரிவு
தேசிய கல்வியற்கல்லூரி ஆசிரியர்களுக்கு, வழங்கப்பட்டிருக்கும் நியமனங்களை மீள்பரிசீலனை செய்து, அந்த ஆசிரியர்களுக்கு சொந்தமான மாகாணங்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேரில் சந்தித்து தெளிவுபடுத்தியதுடன் எழுத்து மூலமும் கடிதமொன்றையும் கையளித்தார்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள் வதியும் மாகாணங்களில் ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கும் நிலையில், வேறு மாகாணங்களுக்கு கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை நியமித்துள்ளமையை உடனடியாக இரத்துச் செய்து, அந்தந்த மாகாணங்களிலுள்ள வெற்றிடங்களுக்கு அவர்களை நியமிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களை வேறு மாகாணங்களுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதெனவும், ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்கு பயணம் செய்வதிலேயே காலம் கழியும் எனவும் பல்வேறு போக்குவரத்துச் சிரமங்கள் ஏற்படும் எனவும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்குப் பரிச்சயமான சூழலில் கல்வி கற்பிப்பது, அவர்களுக்கு வசதியானது. எனச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இதன் மூலம் மாணவர்களுக்கும் உச்ச பலன் கிடைக்கும் என அமைச்சர் அகிலவிராஜ் அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார். எனவே, இதனைக் கருத்திற்கு எடுத்து, ஆசிரியர்களுக்கு சொந்தமான மாகாணங்களில் அவர்களுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் மேலும் கோரியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் தாம் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் குறிப்பிட்டார்.
கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை சொந்த மாகாணங்களில் நியமியுங்கள்
அகிலவிராஜை நேரில் சந்தித்து றிஷாட் எடுத்துரைப்பு
ஊடகப்பிரிவு
தேசிய கல்வியற்கல்லூரி ஆசிரியர்களுக்கு, வழங்கப்பட்டிருக்கும் நியமனங்களை மீள்பரிசீலனை செய்து, அந்த ஆசிரியர்களுக்கு சொந்தமான மாகாணங்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேரில் சந்தித்து தெளிவுபடுத்தியதுடன் எழுத்து மூலமும் கடிதமொன்றையும் கையளித்தார்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள் வதியும் மாகாணங்களில் ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கும் நிலையில், வேறு மாகாணங்களுக்கு கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை நியமித்துள்ளமையை உடனடியாக இரத்துச் செய்து, அந்தந்த மாகாணங்களிலுள்ள வெற்றிடங்களுக்கு அவர்களை நியமிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களை வேறு மாகாணங்களுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதெனவும், ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்கு பயணம் செய்வதிலேயே காலம் கழியும் எனவும் பல்வேறு போக்குவரத்துச் சிரமங்கள் ஏற்படும் எனவும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்குப் பரிச்சயமான சூழலில் கல்வி கற்பிப்பது, அவர்களுக்கு வசதியானது. எனச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இதன் மூலம் மாணவர்களுக்கும் உச்ச பலன் கிடைக்கும் என அமைச்சர் அகிலவிராஜ் அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார். எனவே, இதனைக் கருத்திற்கு எடுத்து, ஆசிரியர்களுக்கு சொந்தமான மாகாணங்களில் அவர்களுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் மேலும் கோரியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் தாம் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் குறிப்பிட்டார்.
Comments
Post a comment