ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
அரசமைப்பு உருவாக்கம் குறித்த சங்க சபாவின் அறிவிப்பு சரியானதே; உண்மை அம்பலம்!
++++++++++++++++++++++++++++++++
அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களும், இரு பீடங்களின் சங்க சபாவின் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்குப் பின்னால் இருப்பதாக அஸ்கிரிய பீடத்தின், செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என இலங்கை பிரதமர் கூறியுள்ள நிலையில், நேற்றிரவு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்ட, அஸ்கிரிய பீடத்தின், செயலாளர் மெதகம தம்மானந்த தேரர், “புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கைக்குப் பின்னால் அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகள் உள்ளனர்.
தற்போதைய அரசியலமைப்பின் மீது இரு மகாநாயக்கர்களும் திருப்தி கொண்டுள்ளனர். புதியதொரு அரசியலமைப்பு தேவையில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றங்களை நிராகரித்து, உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் சங்க சபாவின் முடிவை, பாராட்டுவதாக ராமன்னய மகா நிக்காயாவின் சங்க சபாவின் உறுப்பினரான பேராதனை ராஜபவனாராமய விகாரையின் பிரதம விகாராதிபதி கெபிட்டியாகொட சிறிவிமல நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
இரு பீடங்களினதும், இந்த முடிவு பொருத்தமானது என்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(சுடர்ஒளி)
++++++++++++++++++++++++++++++++
அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களும், இரு பீடங்களின் சங்க சபாவின் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்குப் பின்னால் இருப்பதாக அஸ்கிரிய பீடத்தின், செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என இலங்கை பிரதமர் கூறியுள்ள நிலையில், நேற்றிரவு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்ட, அஸ்கிரிய பீடத்தின், செயலாளர் மெதகம தம்மானந்த தேரர், “புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கைக்குப் பின்னால் அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகள் உள்ளனர்.
தற்போதைய அரசியலமைப்பின் மீது இரு மகாநாயக்கர்களும் திருப்தி கொண்டுள்ளனர். புதியதொரு அரசியலமைப்பு தேவையில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றங்களை நிராகரித்து, உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் சங்க சபாவின் முடிவை, பாராட்டுவதாக ராமன்னய மகா நிக்காயாவின் சங்க சபாவின் உறுப்பினரான பேராதனை ராஜபவனாராமய விகாரையின் பிரதம விகாராதிபதி கெபிட்டியாகொட சிறிவிமல நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
இரு பீடங்களினதும், இந்த முடிவு பொருத்தமானது என்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(சுடர்ஒளி)
Comments
Post a comment