වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
பல வருட காலமாக சாய்ந்தமருது மக்களால் முன்வைக்கப்படும் உள்ளுராட்சிசபையைப் பெறுவதற்காக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலை முன்னிறுத்தி எதிர்வரும் தேர்தல்களில் சுயட்சையாக போட்டியிடவும் தயங்கோம் என்று எப்.சி.டி.ஒ.எனப்படும் சுதந்திர சமூக அமைப்பின் முக்கியஸ்தர் ஏ.ஆர்.எம்.அஸீம் தெரிவித்தார்.
சுதந்திர சமூக அமைப்பு 2017-10-17 ஆம் திகதி மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் வரவேற்பு மண்டபத்தில் அமைப்பின் தலைவர் என்.எம்.ஏ.ஜௌபர் தலைமையில் சாய்ந்தமருத்துக்கான உள்ளுராட்சிசபையை வழங்கும் விடயத்தில் அரசியல்வாதிகளும் அரசாங்கமும் பின்னிற்பது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே ஏ.ஆர்.எம்.அஸீம் மேற்படி கருத்துக்களை வெளியிட்டார்.
சாய்ந்தமருது ஏற்கனவே ஒருசபையாக நிருவாகிக்கப்பட்ட பிரதேசம் என்றும் இந்த ஊர் உள்ளுராட்சி சபை ஒன்றைக் கோருவதற்கு உரிய அனைத்து தகைமைகளையும் கொண்டுள்ளதாகவும் சாய்ந்தமருது மக்கள் அநீதியான முறையில் வஞ்சிக்கப்படுவதாகவும் இதன் பின்னணியில் அரசியல்வாதிகளின் அரசியல் விளையாட்டு இருக்கிறதா என்ற சந்தேகம் இருப்பதாகவும் இவைகள் அனைத்தையும் எதிர்காலத்தில் உடைத்தெறிந்து சாய்ந்தமருது மக்களின் நியாயங்களை வெல்ல ஊரில் உள்ள பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புக்களையும் ஒன்றினைத்துக்கொண்டு போராடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா போன்றோர் மக்கள் மத்தியில் உத்தரவாதங்களை வழங்கியபோதிலும் அவைகளை நிவர்த்திக்க முன்வராதிருப்பது பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளதாகவும் சாய்ந்தமருது மக்களுக்கு ஆரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகள் விடயத்தில் மிகுந்த விரக்தியுடன் இருப்பதாகவும் கூடிய விரைவில் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டிக்கொண்டு சத்தியாக்கிரக போராட்டங்களில் இறங்கப்போவதாகவும் சாய்ந்தமருது மக்களின் நியாயங்களை பெற்றுக்கொள்வதற்காய் நியாயம்கோரி நீதிமன்றம் வரையும் செல்வதற்கும் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது அமைப்பின் சார்பில் ஏ.எல்.எம்.நஜீம், எம்.ஐ.எம்.தப்லிக் மற்றும் எம்.ஐ.எம்.ஹில்மி உள்ளிட்ட அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்டனர்.
Comments
Post a comment