அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
எம்.வை.அமீர் -
சாய்ந்தமருது கமு/கமு மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வு, மற்றும் மாணவர்கள் கௌரவிப்பு விழாவும் கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஐ. மதனி தலைமையில்16.10.2017 திகதியன்று கல்லூரியின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொருளாளரும், யஹியாகான் பவுண்டேஷன் அமைப்பினுடைய தலைவருமாகிய ஏ.சி.யஹியாகான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இங்கு பிரதம அதிதி உரையாற்றும் போது அதிபர் அவர்களின் வேண்டுகோளினை அடுத்து போட்டோ பிரதி பண்ணும் இயந்திரம் (Photo Copier Machine) ஒன்றினை வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.
மேலும், கௌரவ அதிதிகளாக வலய கல்வி உதவி பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் மற்றும் கோட்டை கல்வி அதிகாரி ஐ.எல்.ஏ.ரஹ்மான் விஷேட அதிதிகளாக உதவி அதிபர் ஏ.எல்.எம். தன்சீல்,பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.எல். ஹிதாயத்துல்லாஹ்,தென் கிழக்கு பல்கலைக் கழக உத்தியோகத்தர் எஸ்.எம். கலீல் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வின் போது ஆசிரியர்களுக்கு பரிசுப்பொருட்களும், மாணவர்களுக்கு பணப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் எப்.எம்.பர்ஹான் என்பவருக்கு அவரின் கல்வி நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் வகையில் கற்றல் உபகரணங்கள் மற்றும் பணப்பரிசும் வழங்கி பாராட்டப்பட்டார்.
மேலும்,பிரதம அதிதிக்கு கல்லூரின் அதிபரால் நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
Comments
Post a comment