முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
மேல் மாகாண ஆசிரியர்கள் பலர், பாடசாலை நேரங்களில் வேறு பணிகளில் ஈடுபடுவது கண்டுபிடிப்பு:
மேல் மாகாண கல்வி அமைச்சிடம் முறைப்பாடு
( மினுவாங்கொடை நிருபர் )
மேல் மாகாணப் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள், பாடசாலை நேரங்களில் வெளி வேலைகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரியவந்துள்ளது.
பாடசாலை வகுப்பு நேரங்களில் டியூஷன் வகுப்புக்கள் நடத்துதல், பிரதேசத்தில் செய்தி சேகரிப்புப் பணிகளில் ஈடுபடல், பல்வேறு சிறு தொழில்கள் செய்தல் உள்ளிட்ட தமது சொந்தத் தேவைகளின் நிமித்தம், பெரும்பாலான ஆசிரிய ஆசிரியைகள் இவ்வாறு பாடசாலைக் கடமைகளைப் புறக்கணித்துச் செயற்படுவதாக, பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள், மேல் மாகாண கல்வி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.
இது தொடர்பில், ஆசிரியர் சங்கங்களின் ஊடாகவும் மேல் மாகாண கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்சவின் கவனம் திரும்பியுள்ளதுடன், இது சம்பந்தமாக உடனடி அவதானம் எடுத்து செயற்பட்டு, தனக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு, அமைச்சர் மேல் மாகாண கல்விக் காரியாலய கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறான நடவடிக்கைச் செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுவது உடனடியாக தவிர்க்கப்படல் வேண்டும் என்றும், தொடர்ந்தும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எதிராக, கல்வி நடவடிக்கைச் சட்டங்களுக்கு அமைவாக, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேல் மாகாண கல்வி அமைச்சினால் முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )
Comments
Post a comment