ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
கல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வீட்டுக்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் டொன் பிரியசாத் உட்பட நால்வரை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மாலை கைதுசெய்துள்ளனர்.
கடல்மார்க்கமாக 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இலங்கை நோக்கி வந்த நிலையில் நீதிமன்ற தீர்பின் படி அவர்களை கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் தங்க வைக்கப்பட்ட வீட்டிற்கு முன்னாள் பிக்குகள் உட்பட சிலர் வன்முறையில் ஈடுபட்டதுடன் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து அவர்களின் பாதுகாப்புக் கருதி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் பூஸா தடுப்பு முகாமில் கொண்டுசென்று அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டது.
குறித்த கல்கிசை வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை ஒருவரும் இன்று காலை பெண்ணொருவரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று மாலை டொன் பிரியசாத் உட்பட நால்வரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 6 பேர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடல்மார்க்கமாக 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இலங்கை நோக்கி வந்த நிலையில் நீதிமன்ற தீர்பின் படி அவர்களை கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் தங்க வைக்கப்பட்ட வீட்டிற்கு முன்னாள் பிக்குகள் உட்பட சிலர் வன்முறையில் ஈடுபட்டதுடன் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து அவர்களின் பாதுகாப்புக் கருதி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் பூஸா தடுப்பு முகாமில் கொண்டுசென்று அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டது.
குறித்த கல்கிசை வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை ஒருவரும் இன்று காலை பெண்ணொருவரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று மாலை டொன் பிரியசாத் உட்பட நால்வரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 6 பேர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment