முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
உள்ளூர் வெளியூர் அரிசி வகைகளைக் கலந்து,
குறைந்த விலைக்கு அரிசி விற்பனை செய்யமுடியும்
--- மரந்தகஹமுல அரிசி விற்பனைச் சங்கத் தலைவர்
( மினுவாங்கொடை நிருபர் )
அரசாங்கம் அரிசி வகைகளுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்கினாலும், அரிசி வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும், பழைய விலைகளுக்கே அரிசி வகைகள் விற்கப்பட்டு வருவதாகவும், மினுவாங்கொடை - மரந்தகஹமுல ஐக்கிய அரிசி விற்பனை சங்கத்தின் தலைவர் ரஞ்சித் கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
தற்போது அரிசி விற்பனைச் சந்தையில், பெருமளவிலான பாவனையாளர்கள் அரிசி வாங்குவது குறைவடைந்துள்ளது. இதனால், அரிசி விற்பனையில் அதிகளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எனினும், மக்களின் நன்மை கருதி, அரிசி விலைகளை உயர்த்தாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அத்துடன், உள்நாட்டில் உற்பத்தியாகும் வெள்ளைப் பச்சை, நாடு அரிசி வகைகளை, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளைப் பச்சை, நாடு அரிசி வகைகளுடன் கலந்து, மிகக் குறைந்த விலைகளில் விற்பனை செய்து வருகின்றோம்.
தற்போது அரிசி, மரக்கறி, மீன், கருவாடு ஆகியவற்றின் விலைகள் சந்தையில் அதிகரிக்கப்பட்டிருப்பதால், மக்கள் ஒரு நாளில் ஒரு வேளை உண்பதற்காக மாத்திரமே அரிசியினைப் பயன்படுத்தி வருகின்றார்கள். ஏனைய வேளைகளில், வேறு ஏதாவது ஒரு ஆகாரத்தைத் தேடிக்கொள்கின்றார்கள். இதனாலேயே, அரிசி விற்பனை குறைவடைந்துள்ளது. அரிசியின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டாலும், அரிசியின் விலைகளில் கூடுதல் குறைவு ஏற்படாமல் இருப்பதும் இதன் காரணமாகத்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மரந்தகஹமுல அரிசி விற்பனைச் சந்தையில், சம்பா அரிசி கிலோ ஒன்றின் மொத்த விலை 93 ரூபாவுக்கும், நாடு அரிசி கிலோ ஒன்றின் மொத்த விலை 88 - 90 ரூபாவுக்கு இடையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது, வெளிநாட்டு அரிசி வகைகள் கலக்கப்படாத, மிகவும் சுத்தமான உள்நாட்டு அரிசி வகைகளாகும் எனவும் அரிசி விற்பனைச் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் கருணாதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments
Post a comment