- பிரதமர் நடவடிக்கை
( மினுவாங்கொடை நிருபர் )
நாடளாவிய ரீதியில் நிலவிய நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் விவாகப் பதிவாளர்களுக்கான வெற்றிடங்கள், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் தலையீட்டினால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம், கம்பஹா மாவட்டத்தின் மாபோல வத்தளை பிரதேசத்திற்கான விவாகப் பதிவாளராக ஊடகவியலாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான மௌலவி மௌசூக் அப்துர்ரஹ்மான் (ஹுஸைனி), பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அலரி மாளிகையில் வைத்து நியமனம் பெற்றுக்கொண்டார்.
கம்பஹா மாவட்டத்தின் மாபோல வத்தளை பிரதேசத்தில் நீண்ட காலம் நிலவி வந்த முஸ்லிம் விவாகப்பதிவாளர் வெற்றிடத்தை நிரப்பும் வகையிலேயே அப்துல் ரஹ்மானுக்கு கடந்த வியாழக்கிழமையன்று அலரிமாளிகையில் வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நாடளாவிய ரீதியில் நிலவிய நூற்றுக்கு அதிகமான விவாக பதிவாளர் வெற்றிடங்களுக்கான நியமனங்கள் வழங்கி
வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
Post a Comment