වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
ஜனநாயக நாட்டில் ஒரு முஸ்லிம் வாழ்வது தவறா?
ஜனநாயகம் இணைவைப்பு, குப்ர் என்றும் அத்தகைய நாட்டில் ஒரு முஸ்லிம் வாழ்வது கூடாது என்று இன்றைய வாலிபர்கள் பலர் இஸ்லாம பற்றி சரியாக அறியாமல் முகநூலில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நான் அவ்வப்போது வழங்கிய பதிலை இங்கு தொகுத்து தருகிறேன்.
ஜனநாயகம் இஸ்லாத்துக்கு முரண் என்றால் உலகால் ஏற்கப்பட்ட ஜனநாயகம் என்ற கோட்பாடு அதாவது அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் ஒன்று என்ற ஜனநாயக கோட்பாடு உண்டா?
இல்லை என்பதே எனது வாதம். ஜனநாயகம் என்றால் முன்னரும் நான் சொல்லியுள்ளேன் சனம் நாயகமாக இருப்பது மட்டுமே ஜன நாயகம். அதாவது மக்களை மக்கள் ஆள்வது. இதுமட்டும்தான் ஜனநாயகம். மற்றபடி இதுதான் ஜனநாயகம் என அனைத்து ஜனநாயக நாடுகளும் ஏற்றுக்கொண்ட எழுத்திலான கோட்பாடு ஒன்றில்லை.
ஜனநாயக நாடுகள் என சொல்லிக்கொள்ளும் நாடுகள் ஒவ்வொன்றும் தத்தம் இஷ்டம் போல் சட்டங்களை இயற்றிக்கொண்டுள்ளதன் மூலம் இதுதான் ஜனநாயகம் என்ற கோட்பாடு இல்லை.
ஆகவே வெறுமனே பெயரளவில் உள்ள, யதார்த்தத்தில் இதுதான் என்ற இல்லாத கோட்பாடு பற்றி முஸ்லிம்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை.
மதங்களை பொறுத்தவரை ஜனநாயகம் இஸ்லாத்தின் கோட்பாட்டையே கொண்டுள்ளது. அது லக்கும் தீனுக்கும் வலிய தீன் என்பதாகும். அதாவது அவரவர் மார்க்கம் அவரவருக்கு என்பதாகும். இதனை ஜனநாயக நாடுகள் சரியாக கடைப்பிடிக்கின்றதா என்பது வேறு விடயம். ஆனாலும் கோட்பாட்டில் உள்ளது. ஜனநாயகத்தில் உள்ள அநேக சட்டங்கள் இஸ்லாத்தில் இருந்து பெறப்பட்டதாகும்.
சட்டமியற்றும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே என சொல்வது இறைவன் மீது இட்டுக்கட்டாகும். உமர் ரழி பல சட்டங்களை அறிமுகப்படுத்தினார். இன்று பாஸ்போட், விசா, போக்குவரத்து சட்டம் எல்லாம் இறைவன் சொன்ன சட்டமல்ல. இந்த முகநூலில் நுழைவது என்றால் இன்ன இன்ன சட்டம் என ஏற்றுக்கொண்ட பின்தான் நுழைய முடியும். இப்படியெல்லாம் சட்டங்களுக்கு ஓகே சொல்லி முகநூலில் நுழைந்து விட்டு மனிதன் சட்டம் இயற்றக்கூடாது என சில வாலிபர்கள் உளறுவது மகா மடமை.
இறைவன் இயற்றிய சட்டத்துக்கு முரணாக மனிதன் சட்டம் இயற்றுவதே தவறு.
நபி யூசுப் அவர்கள் அரசரின் அமைச்சராக இருந்த போது ஒரு முஸ்லிமாகவும் இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டல் பெறுபவருமாகவே இருந்தார் என்றே கருத வேண்டியுள்ளது. காரணம் அவர் கனவுக்கு பலாபலன் சொல்லும் அறிவு தனக்கு இறுப்பதாக தனது சிறைத்தோழர்களிடம் சொன்னாரே தவிர தனக்கு வஹி மூலம் அதன் பொருள் அறியக்கிடைப்பதாக சொல்லவில்லை.
ஆகவே அவர் நபியாக இல்லாத நிலையில் மன்னரின் மாளிகையில் நபி மூசா போன்று இருந்தார் என்பதையே புரிந்து கொள்கிறோம்.
எனவே எகிப்திய மன்னர் முஸ்லிம் அல்லாதவராகவே இருப்பதற்கு சாத்தியமுள்ளது.
அத்துடன் ஒரு முஸ்லிம் காபிரான ஆட்சிக்கு தனக்கோ சமூகத்துக்கோ பாதகம் இல்லாத பட்சத்தில் ஒத்துழைக்கலாம் என்பதற்கு மூசா நபியின் வாழ்க்கையும் மிகப்பெரிய ஆதாரமாகும்.
யூசுப் நபி, மூசா நபி, இப்ராஹீம் நபி மற்றும் முஹம்மது நபி உட்பட அனைத்து நபிமாரும் அகீதா என்ற இஸ்லாமிய அடிப்படைக்கொள்கையில் ஒத்த கருத்துள்ளவர்களாகவே இருந்தனர். அவர்களின் ஷரீயத் எனும் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களில்தான் சில வேற்றுமைகள் இருந்தன.
ஒரு காபிரான ஆட்சியில் முஸ்லிம் பங்கு வகிக்கலாமா என்பது ஷரீயா சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல. அது கொள்கை சம்பந்தப்பட்ட ஒன்று. அதாவது ஆட்சியுரிமை அள்ளாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பது கொள்கை சம்பந்தப்பட்டது.
ஒரு முஸ்லிம் இறைவனின் ஆட்சி அதிகாரத்தை பூமியில் கொண்டு வர பணிக்கப்பட்டவன். ஆனால் அக்கொள்கைக்காக அவன் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதுதான் ஷரீயத் காட்டும் வழிமுறை.
ஒரு முஸ்லிம் காபிரின் ஆட்சியில் ஆட்சியாளருடன் இருக்கலாம் என்பது கொள்கை சார்ந்தது. மூசா நபியவர்களை பிர் அவ்னின் சாப்பாட்டை சாப்பிட்டு அவரை அங்கு இறைவன் வாழவைத்ததன் மூலம் ஆட்சி அதிகாரம் கிடைக்கும் வரை அவ்வாறு வாழலாம் என்பதை இறைவன் நமக்கு கற்றுத்தருகிறான்.
அதே போல் மூசா நபியும் பின்னர் ஆட்சி அதிகாரத்தை கையிலெடுத்து இறையாட்சியை நிலை நாட்டுகிறார்.
அதே போல் யூசுப் நபியும் குப்ர் ஆட்சியில் பங்கெடுத்து தான் நல்லவன் என்றும் அறிவும் ஆற்றலுமிக்கவர் என்பதையும் நிரூபிக்கிறார். அவர் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் போல் மன்னரின் சொந்த விருப்பத்தின் பேரில் அமைச்சராக நியமிக்கப்படுகிறார். பின்னர் அவருக்கு இறைவன் ஆட்சியதிகாரத்தை கொடுக்கிறான்.
இதே போல் முஹம்மது நபியவர்களும் காபிர்களின் கண்காணிப்பில் வளர்க்கப்படுகிறார்கள். அப்துல் முத்தலிப், அபூ தாலிப் போன்றோர் முஸ்லிம்களான அதிகாரமிக்கவர்கள் அல்ல. நபித்துவம் கிடைக்கப்பெற்ற பிறகும் பல வருடங்கள் மக்கத்து குப்ர் ஆட்சியின் கீழ்தான் மார்க்க போதனைகளை முன்னெடுத்தார்கள். மதீனாவுக்கு வந்தபின்னரே அவர்கள் ஆட்சியாளராக மாறினர். இத்தனைக்கும் நபியுள்ளாஹ் மக்காவின் குப்ர் ஆட்சியில் வாழும் போது அந்த ஆட்சிக்கெதிராக நபியவர்கள் ஆயுதம் தூக்கி போராடவில்லை. மாறாக இன்றைய ஜனநாயகம் போல் தமது கருத்துச்சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தினார்கள். அதற்கும் இடம் மறுக்கப்பட்டு கொல்லப்படும் சூழ்நிலை வந்த போதும் அடைந்தால் ஆட்சி இல்லையேல் மரணம் என அவர்கள் சண்டைக்கு கிளம்பவில்லை. சத்தமே இல்லாமல் குப்ர் ஆட்சியை விட்டு வெளியேறினார்கள். இவைதான் முஹம்மது நபியின் உஸ்வதுன் ஹசனா என்ற அழகிய வழிமுறைகளில் உள்ளவை.
நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் முஸ்லிம் அல்லாத ஆட்சியில் அமைச்சராக இருந்தது என்பது நமக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். அதாவது காபிரின் ஆட்சியிலும் நாம் பதவி வகிக்கலாம் என்பதை காட்டுகிறது.
இதனை மறுக்கும் சிலர் முஹம்மது நபியவர்கள் இறுதி நபி என்பதால் அன்னார் தந்த சட்டத்தையே நாம் பின்பற்ற வேண்டும் என்பதால் யூசுப் நபியின் இந்த வழி காட்டலை பின்பற்றக்கூடாது என்கின்றனர். இது ஏற்புடைய கருத்து அல்ல.
ஏனென்றால் நபிமார்கள் அனைவரும் ஒரே கொள்கையின் அடிப்படையில்தான் அனுப்பப்பட்டனர். கால சூழலுக்கேற்ப சில சட்டங்கள் மட்டும் மாற்றப்பட்டன. அவ்வாறு ஏதாவது சட்டம் முஹம்மது நபியவர்களால் மாற்றப்பட்டிருந்தால் அதனை நாம் பின்பற்ற வேண்டும், முன்னுள்ள நபிமாரை அதே விடயத்தில் பின் பற்ற முடியாது. ஒரு முஸ்லிம் அல்லாத அரசில் பங்காளியாக ஒரு முஸ்லிம் இருப்பது கூடாது என நேரடியாக தடை போடும் குர் ஆன் வசனமோ, ஹதீதோ இல்லாத நிலையில் முன்னுள்ள நபியான யூசுப் நபியை ஆதாரம் காட்டுவதில் தவறில்லை.
முஹம்மது நபி صلى கூட பல தடவைகள் انا في ملة ابراهيم நான் இப்ராஹீம் நபியின் வழியில் இருக்கிறேன் என சொல்லியுள்ளார்கள். இதன் மூலம் முஹம்மது நபியவர்கள் கொண்டு வந்த மார்க்கம் என்பது அன்னாருக்கு பல தலைமுறைகளுக்கப்பால் வாழ்ந்த நபி இப்ராகீமின் மார்க்க வழி காட்டல் என்பதை புரிகிறோம். நபிமார்கள் அனைவருமே ஒரே வழி முறையைத்தான் - சில வித்தியாசங்களுடன்- போதித்தார்கள்.
ஆகவே நபி யூசுப்பின் வழி காட்டல் முஹம்மது நபியின் நேரடி கருத்துக்கு மாற்றமாக இருப்பின் மட்டுமே அதனை நாம் பின்பற்ற முடியாது.
அந்த வகையில் ஒரு முஸ்லிம், முஸ்லிம் அல்லாத ஆட்சியில் பங்கு வகிக்கலாம்.
-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர்
உலமா கட்சி
Sri Lanka Ulama council
ஜனநாயகம் இணைவைப்பு, குப்ர் என்றும் அத்தகைய நாட்டில் ஒரு முஸ்லிம் வாழ்வது கூடாது என்று இன்றைய வாலிபர்கள் பலர் இஸ்லாம பற்றி சரியாக அறியாமல் முகநூலில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நான் அவ்வப்போது வழங்கிய பதிலை இங்கு தொகுத்து தருகிறேன்.
ஜனநாயகம் இஸ்லாத்துக்கு முரண் என்றால் உலகால் ஏற்கப்பட்ட ஜனநாயகம் என்ற கோட்பாடு அதாவது அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் ஒன்று என்ற ஜனநாயக கோட்பாடு உண்டா?
இல்லை என்பதே எனது வாதம். ஜனநாயகம் என்றால் முன்னரும் நான் சொல்லியுள்ளேன் சனம் நாயகமாக இருப்பது மட்டுமே ஜன நாயகம். அதாவது மக்களை மக்கள் ஆள்வது. இதுமட்டும்தான் ஜனநாயகம். மற்றபடி இதுதான் ஜனநாயகம் என அனைத்து ஜனநாயக நாடுகளும் ஏற்றுக்கொண்ட எழுத்திலான கோட்பாடு ஒன்றில்லை.
ஜனநாயக நாடுகள் என சொல்லிக்கொள்ளும் நாடுகள் ஒவ்வொன்றும் தத்தம் இஷ்டம் போல் சட்டங்களை இயற்றிக்கொண்டுள்ளதன் மூலம் இதுதான் ஜனநாயகம் என்ற கோட்பாடு இல்லை.
ஆகவே வெறுமனே பெயரளவில் உள்ள, யதார்த்தத்தில் இதுதான் என்ற இல்லாத கோட்பாடு பற்றி முஸ்லிம்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை.
மதங்களை பொறுத்தவரை ஜனநாயகம் இஸ்லாத்தின் கோட்பாட்டையே கொண்டுள்ளது. அது லக்கும் தீனுக்கும் வலிய தீன் என்பதாகும். அதாவது அவரவர் மார்க்கம் அவரவருக்கு என்பதாகும். இதனை ஜனநாயக நாடுகள் சரியாக கடைப்பிடிக்கின்றதா என்பது வேறு விடயம். ஆனாலும் கோட்பாட்டில் உள்ளது. ஜனநாயகத்தில் உள்ள அநேக சட்டங்கள் இஸ்லாத்தில் இருந்து பெறப்பட்டதாகும்.
சட்டமியற்றும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே என சொல்வது இறைவன் மீது இட்டுக்கட்டாகும். உமர் ரழி பல சட்டங்களை அறிமுகப்படுத்தினார். இன்று பாஸ்போட், விசா, போக்குவரத்து சட்டம் எல்லாம் இறைவன் சொன்ன சட்டமல்ல. இந்த முகநூலில் நுழைவது என்றால் இன்ன இன்ன சட்டம் என ஏற்றுக்கொண்ட பின்தான் நுழைய முடியும். இப்படியெல்லாம் சட்டங்களுக்கு ஓகே சொல்லி முகநூலில் நுழைந்து விட்டு மனிதன் சட்டம் இயற்றக்கூடாது என சில வாலிபர்கள் உளறுவது மகா மடமை.
இறைவன் இயற்றிய சட்டத்துக்கு முரணாக மனிதன் சட்டம் இயற்றுவதே தவறு.
நபி யூசுப் அவர்கள் அரசரின் அமைச்சராக இருந்த போது ஒரு முஸ்லிமாகவும் இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டல் பெறுபவருமாகவே இருந்தார் என்றே கருத வேண்டியுள்ளது. காரணம் அவர் கனவுக்கு பலாபலன் சொல்லும் அறிவு தனக்கு இறுப்பதாக தனது சிறைத்தோழர்களிடம் சொன்னாரே தவிர தனக்கு வஹி மூலம் அதன் பொருள் அறியக்கிடைப்பதாக சொல்லவில்லை.
ஆகவே அவர் நபியாக இல்லாத நிலையில் மன்னரின் மாளிகையில் நபி மூசா போன்று இருந்தார் என்பதையே புரிந்து கொள்கிறோம்.
எனவே எகிப்திய மன்னர் முஸ்லிம் அல்லாதவராகவே இருப்பதற்கு சாத்தியமுள்ளது.
அத்துடன் ஒரு முஸ்லிம் காபிரான ஆட்சிக்கு தனக்கோ சமூகத்துக்கோ பாதகம் இல்லாத பட்சத்தில் ஒத்துழைக்கலாம் என்பதற்கு மூசா நபியின் வாழ்க்கையும் மிகப்பெரிய ஆதாரமாகும்.
யூசுப் நபி, மூசா நபி, இப்ராஹீம் நபி மற்றும் முஹம்மது நபி உட்பட அனைத்து நபிமாரும் அகீதா என்ற இஸ்லாமிய அடிப்படைக்கொள்கையில் ஒத்த கருத்துள்ளவர்களாகவே இருந்தனர். அவர்களின் ஷரீயத் எனும் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களில்தான் சில வேற்றுமைகள் இருந்தன.
ஒரு காபிரான ஆட்சியில் முஸ்லிம் பங்கு வகிக்கலாமா என்பது ஷரீயா சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல. அது கொள்கை சம்பந்தப்பட்ட ஒன்று. அதாவது ஆட்சியுரிமை அள்ளாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பது கொள்கை சம்பந்தப்பட்டது.
ஒரு முஸ்லிம் இறைவனின் ஆட்சி அதிகாரத்தை பூமியில் கொண்டு வர பணிக்கப்பட்டவன். ஆனால் அக்கொள்கைக்காக அவன் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதுதான் ஷரீயத் காட்டும் வழிமுறை.
ஒரு முஸ்லிம் காபிரின் ஆட்சியில் ஆட்சியாளருடன் இருக்கலாம் என்பது கொள்கை சார்ந்தது. மூசா நபியவர்களை பிர் அவ்னின் சாப்பாட்டை சாப்பிட்டு அவரை அங்கு இறைவன் வாழவைத்ததன் மூலம் ஆட்சி அதிகாரம் கிடைக்கும் வரை அவ்வாறு வாழலாம் என்பதை இறைவன் நமக்கு கற்றுத்தருகிறான்.
அதே போல் மூசா நபியும் பின்னர் ஆட்சி அதிகாரத்தை கையிலெடுத்து இறையாட்சியை நிலை நாட்டுகிறார்.
அதே போல் யூசுப் நபியும் குப்ர் ஆட்சியில் பங்கெடுத்து தான் நல்லவன் என்றும் அறிவும் ஆற்றலுமிக்கவர் என்பதையும் நிரூபிக்கிறார். அவர் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் போல் மன்னரின் சொந்த விருப்பத்தின் பேரில் அமைச்சராக நியமிக்கப்படுகிறார். பின்னர் அவருக்கு இறைவன் ஆட்சியதிகாரத்தை கொடுக்கிறான்.
இதே போல் முஹம்மது நபியவர்களும் காபிர்களின் கண்காணிப்பில் வளர்க்கப்படுகிறார்கள். அப்துல் முத்தலிப், அபூ தாலிப் போன்றோர் முஸ்லிம்களான அதிகாரமிக்கவர்கள் அல்ல. நபித்துவம் கிடைக்கப்பெற்ற பிறகும் பல வருடங்கள் மக்கத்து குப்ர் ஆட்சியின் கீழ்தான் மார்க்க போதனைகளை முன்னெடுத்தார்கள். மதீனாவுக்கு வந்தபின்னரே அவர்கள் ஆட்சியாளராக மாறினர். இத்தனைக்கும் நபியுள்ளாஹ் மக்காவின் குப்ர் ஆட்சியில் வாழும் போது அந்த ஆட்சிக்கெதிராக நபியவர்கள் ஆயுதம் தூக்கி போராடவில்லை. மாறாக இன்றைய ஜனநாயகம் போல் தமது கருத்துச்சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தினார்கள். அதற்கும் இடம் மறுக்கப்பட்டு கொல்லப்படும் சூழ்நிலை வந்த போதும் அடைந்தால் ஆட்சி இல்லையேல் மரணம் என அவர்கள் சண்டைக்கு கிளம்பவில்லை. சத்தமே இல்லாமல் குப்ர் ஆட்சியை விட்டு வெளியேறினார்கள். இவைதான் முஹம்மது நபியின் உஸ்வதுன் ஹசனா என்ற அழகிய வழிமுறைகளில் உள்ளவை.
நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் முஸ்லிம் அல்லாத ஆட்சியில் அமைச்சராக இருந்தது என்பது நமக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். அதாவது காபிரின் ஆட்சியிலும் நாம் பதவி வகிக்கலாம் என்பதை காட்டுகிறது.
இதனை மறுக்கும் சிலர் முஹம்மது நபியவர்கள் இறுதி நபி என்பதால் அன்னார் தந்த சட்டத்தையே நாம் பின்பற்ற வேண்டும் என்பதால் யூசுப் நபியின் இந்த வழி காட்டலை பின்பற்றக்கூடாது என்கின்றனர். இது ஏற்புடைய கருத்து அல்ல.
ஏனென்றால் நபிமார்கள் அனைவரும் ஒரே கொள்கையின் அடிப்படையில்தான் அனுப்பப்பட்டனர். கால சூழலுக்கேற்ப சில சட்டங்கள் மட்டும் மாற்றப்பட்டன. அவ்வாறு ஏதாவது சட்டம் முஹம்மது நபியவர்களால் மாற்றப்பட்டிருந்தால் அதனை நாம் பின்பற்ற வேண்டும், முன்னுள்ள நபிமாரை அதே விடயத்தில் பின் பற்ற முடியாது. ஒரு முஸ்லிம் அல்லாத அரசில் பங்காளியாக ஒரு முஸ்லிம் இருப்பது கூடாது என நேரடியாக தடை போடும் குர் ஆன் வசனமோ, ஹதீதோ இல்லாத நிலையில் முன்னுள்ள நபியான யூசுப் நபியை ஆதாரம் காட்டுவதில் தவறில்லை.
முஹம்மது நபி صلى கூட பல தடவைகள் انا في ملة ابراهيم நான் இப்ராஹீம் நபியின் வழியில் இருக்கிறேன் என சொல்லியுள்ளார்கள். இதன் மூலம் முஹம்மது நபியவர்கள் கொண்டு வந்த மார்க்கம் என்பது அன்னாருக்கு பல தலைமுறைகளுக்கப்பால் வாழ்ந்த நபி இப்ராகீமின் மார்க்க வழி காட்டல் என்பதை புரிகிறோம். நபிமார்கள் அனைவருமே ஒரே வழி முறையைத்தான் - சில வித்தியாசங்களுடன்- போதித்தார்கள்.
ஆகவே நபி யூசுப்பின் வழி காட்டல் முஹம்மது நபியின் நேரடி கருத்துக்கு மாற்றமாக இருப்பின் மட்டுமே அதனை நாம் பின்பற்ற முடியாது.
அந்த வகையில் ஒரு முஸ்லிம், முஸ்லிம் அல்லாத ஆட்சியில் பங்கு வகிக்கலாம்.
-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர்
உலமா கட்சி
Sri Lanka Ulama council
Comments
Post a comment