முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
- ஜனாதிபதி இன்று திறந்துவைக்கிறார்
( மினுவாங்கொடை நிருபர் )
கம்பஹா - திஹாரிய, அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில், புதிதாக
நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடிக்கட்டிடத் தொகுதி, இன்று (17)
வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ள இன்றைய
நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கல்வி
அமைச்சர் அகில விராஜ் காரியவசம், ஊடக மற்றும் வெளிநாட்டு பிரதி அமைச்சர்
லசந்த அழகியவண்ண உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தேசிய மற்றும் சர்வதேச
அதிதிகள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இக்கல்லூரி நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க
உறுப்பினர்கள், கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த தேரரிடம், இக்கல்லூரியில் மிக
நீண்ட காலமாக நிலவிவந்த வகுப்பறை இடப்பற்றாக்குறை தொடர்பாக எடுத்துக்
கூறியதன் விளைவாக, இக் கட்டிடத் தொகுதி 212 இலட்சம் ரூபா செலவில், தேரரின்
தனிப்பட்ட நன்கொடையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சமய நல்லிணக்கத்திற்கு
ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக, இன்றைய நிகழ்வு அமையவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
Comments
Post a comment