වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
- இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காட்டம்
( மினுவாங்கொடை நிருபர் )
இனவாதத்தைப் பரப்பி சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தூண்டி விடுவதன்
மூலம், அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கைப்பற்ற முடியாது என, புனர்வாழ்வு
மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
தெரிவித்தார்.
காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
முப்பது வருட கால பயங்கரவாத யுத்தம் நாட்டின் நிலையான சமதானத்தை
சீர்குலைத்தது. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அது சரியான முறையில் இன்றுவரை
நிலைநாட்டப்படவில்லை. ஆனால், அதற்கான முயற்சிகள் இன்று வரை
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறான
சூழ்நிலையில், இனவாதம் சமூக வலையத்தளங்கள் ஊடாக மிக மோசமான முறையில்
பரப்புரை செய்யப்பட்டு வருகின்றன. இதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும்
சட்டதிட்டங்கள் எம்மத்தியில் இல்லாமல் இருக்கின்றன.
இந்நிலையில், இனவாதத்தைப் பரப்பி, சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளைத்
தோற்றுவிப்பதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற சிலர் முயற்சி செய்து
வருகின்றனர். கிழக்கு மாகாணத்திலும் இந்நிலை உருவாகியுள்ளமை மிகவும்
கவலைக்குரியதாகும்.
தமிழ் - முஸ்லிம்
சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதன் ஊடாக, தமது அரசியல்
அபிலாஷைகளை அடைந்து கொள்ள சிலர் முனைகின்றனர். தேங்காய்ப் பூவும் பிட்டும்
போல் இருந்த தமிழ் - முஸ்லிம் மக்களிடையே, தற்போது பாரிய விரிசல்கள்
ஏற்பட்டுள்ளன. இதனைச் சீர் செய்து பழைய நிலைக்கு இரு சமூகங்களுக்கிடையிலான
உறவைக் கொண்டு செல்வதற்கு, சமூகத் தலைவர்களுக்கும்,
அரசியல்வாதிகளுக்கும் இன்று பாரிய பொறுப்புள்ளது.
யுத்தத்துக்குப் பின்னர் தமிழ் - சிங்கள மக்களிடையேயான உறவை மேம்படுத்த,
பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசால் முன்னெடுக்கப்பட்டன. எனினும், போரால்
விரிசலடைந்த தமிழ் - முஸ்லிம் மக்களிடையிலான உறவைப் பலப்படுத்துவதற்கான
முயற்சிகள், இன்னும் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Comments
Post a comment