ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
( மினுவாங்கொடை நிருபர் )
மினுவாங்கொடை
- கல்லொழுவை, அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த
பரிசளிப்பு விழா வைபவம், (15) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு,
வித்தியாலய மண்டபத்தில், அதிபர் எம்.எச்.எம். காமில் தலைமையில்
இடம்பெறவுள்ளது.
மேல் மாகாண கல்வியமைச்சர் ரஞ்சித் சோமவங்ச பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில்,
பாராளுமன்ற
உறுப்பினர்களான எட்வர்ட் குணசேகர, பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண சபை
உறுப்பினர்களான ஷாபி ரஹீம், எம்.எஸ்.எம். சகாவுல்லா, லயனல் ஜயசிங்க, சமிந்த
டி. சில்வா ஆகியோர் கெளரவ அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
மினுவாங்கொடை ஸ்ரீல.சு.க. அமைப்பாளர் ருவன் ரணதுங்க, மினுவாங்கொடை வலயக்
கல்விப் பணிப்பாளர் எஸ்.கே. மல்லவாரச்சி, மினுவாங்கொடை பிரிவுக் கல்விப்
பணிப்பாளர் சோபா வீரவர்தன, உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். பதூர்தீன்,
கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.
முனாஸ் ஆகியோர் நிகழ்வில் விசேட அதிதிகளாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Comments
Post a comment