වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
பிராந்தியத்தில் தங்களது நலனையும், பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்த வேண்டுமானால் இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியே தீரவேண்டும் என்று 2015 இல்தீவிரமாக செயல்பட்டு அத்திட்டத்தில் வெற்றியும் கண்ட இரண்டு முக்கிய வெளிநாடுகள் தாங்கள் கொண்டுவந்த புதிய அரசு, நேற்று சீன அரச கம்பனியுடன் ஹம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நிமிடம் படு தோல்வியைச் சந்தித்துள்ளன.
ஹம்மாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டதையும், மத்தல விமான நிலையம் இவ்வருட இறுதியில் சீனாவுக்கு வழங்கப்பட இருப்பதையும் சமன் செய்து ஈடு செய்ய, திருகோணமலைத் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு என்று கூறி விரைவில் இந்தியாவுக்கு வழங்கப்படும். இதற்கான ஒப்பந்தத்திலும், எட்கா ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கையைழுத்திட உள்ளன.வடக்கில் உள்ள நாட்டு வளங்களும், ஏனைய சில கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களில் அமைந்துள்ள அரச துறைகளும் அபிவிருத்தி செய்வதற்கென இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளன.
ஆக, தெற்கை சீனாவுக்கும் வடகிழக்கை இந்தியாவுக்கும் கொடுத்து இலங்கை தன்னைத் தானாகவே இரண்டாகப் பிரித்துக் கொண்டுள்ளது. முப்பது ஆண்டுகளாகத் தமிழர் விடுதலைப் போராட்டம் சாதிக்காத பிரிவினையை இலங்கையின் வெளி நாட்டுக் கொள்கை சாத்தியமாக்கியிருக்கிறது.
இலங்கையின் இந்தப் புதிய அரசியல், இராணுவ, பொருளாதார, வெளிவிவகாரப் போக்கு மத்திய அரசைக் காலப்போக்கில் உறுதியற்றதாக்கி, நிலையாத் தன்மையுள்ள பலவீனமான அரசாங்கங்களைத் தொடர்ந்தேர்ச்சியாகத் தோற்றுவிப்பதற்கு வழி கோலலாம்.
தற்போதைய தேசிய அரசாங்கம் மக்கள் எழுச்சியையும், தொழிலாளர் போராட்டங்களையும், வெளிச் சக்திகளின் புனாய்வு வியூகங்களையும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் எதிர் கொள்ள வக்கற்று நொய்ந்து நூலாகி 2020 ஆம் ஆண்டுக்கு முன்னரே அறுந்தும் போகலாம்.
இப்படி நிழ்ந்தால் இனி வரும் நீண்ட காலத்துக்கு- அடிக்கடி தோல்விகள் காணும்- எந்த சக்தியாலும் இலகுவில் புரட்டக்கூடியதான, தற்காலிகமான அரசுகள் அமையும் வாய்ப்பை மறுக்க முடியவில்லை.இப்படியான அரசுகளே சில வெளி நாடுகளின் எதிர்பார்ப்பாக இருக்கலாம். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசில் மிஞ்சப் போவது என்ன? சனநாயகமா? சோசலிசமா? குடியரசா?
நம்மைக் கடந்து பயணிக்கும் காலம் விடை பகரத் தயாராக மெல்லென நகருகிறது.
Basheer Segudavood
Comments
Post a comment