වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
ARA.Fareel-
நாட்டிலுள்ள அனைத்து அரபு மத்ரஸாக்களினதும் கல்வி நடவடிக்கைகளை வேறுபாடுகளின்றி ஒரே பாடத்திட்டத்தில் முன்னெடுக்கும் வகையில் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
நேற்றுக் காலை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமயவிவகாரங்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குர்ஆன் மற்றும் கிரா அத் மனனப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்; 'நாட்டிலுள்ள அரபு மத்ரஸாக்களில் வெவ்வேறான பாடவிதானங்களே போதிக்கப்படுகின்றன. இதனால் அரபுக் கல்லூரிகளின் பாட விதானங்களை ஒரு முகப்படுத்த வேண்டியுள்ளது. அதனால் அனைத்து அரபு மத்ரஸாக்களுக்கும் பொதுவானதொரு பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை, நளீமியா கலாபீடம் மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் ஆலோசனைகளுடன், புதிய பாட நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் மத்ரஸாக்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதன் பின்பு நாட்டிலுள்ள அனைத்து மத்ரஸாக்களிலும் தனித்தனியான பரீட்சைகளின்றி ஒரு பொதுவான பரீட்சையே நடாத்தப்படும். அரபு மத்ரஸாக்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்து வதற்காகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது' என்றார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களையும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் அரசாங்கம் இனங்கண்டு அவை தொடரா வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. என்றாலும் எதிர்காலத்தில் முஸ்லிம் எதிர்நடவடிக்கைகள் நடைபெறமாட்டாது என்று கூற முடியாது.
எனவே சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். சிறுபான்மை சமூகமான நாம் கடந்தகாலங்களில் பல சவால்களை எதிர்கொண்டோம். பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தோம். பிரச்சினைகளின் போது வீரவசனம் பேசுவதால் அவற்றுக்குத் தீர்வு பெற்றுக் கொள்ள முடியாது.
நாம் இந்நாட்டில் பெரும்பான்மை சமூகத்துடன் கலந்து வாழ்கிறோம். நாட்டின் பல பாகங்களில் சிதறி வாழ்கிறோம். எனவே ஏனைய சமூகங்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். இஸ்லாம் அன்பு, கருணை பற்றி அழகாகக் கூறியுள்ளது. ஏனைய மதங்களை கௌரவிக்கும் மதமாக இஸ்லாம் திகழ்கிறது. ஏனைய மதங்களுடன் நல்லுறவினைப் பேணுவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளமுடியும்.
குர்ஆனை ஓதுவதுடனும் மனனம் செய்வதுடனும் நாம் நன்மைகளை அடைந்து விடுவதில்லை. குர்ஆனை விளங்கிக் கொள்ள வேண்டும். குர்ஆன் போதித்துள்ள வாழ்க்கை முறை எமது வாழ்க்கையாக அமைய வேண்டும். இஸ்லாமியரின் மொழி அரபு மொழியாகும். இந்நாட்டில் நாம் தமிழ் மொழியே பேசுகிறோம் என்றாலும் அரபு மொழியைக் கட்டாயமாகக் கற்றுக் கொள்ள வேண்டும். சூறாக்களை ஓதுவதுடன் நின்று விடாது அவற்றின் பொருளை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஏனைய மதத்தினருக்கு இடையூறு இல்லாவண்ணம் எமது வாழ்க்கை முறை அமைய வேண்டும். பல்லின சமூகத்தைக் கொண்டுள்ள எமது நாட்டில் அனைத்து மக்களுடனும் கைகோர்ப்பதன்மூலம் ஓர் சமாதான வாழ்க்கை கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றார்.நிகழ்வில் குர்ஆன், கிராஅத் மனனப் போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Comments
Post a comment