ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
உள்ளூராட்சி தேர்தல் அறுபதுக்கு நாற்பது என்ற முறையில் நடைபெறும் என அரசு தீர்மானித்திருப்பது சிறுபான்மை மக்களுக்கு செய்யும் அநியாயமாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
எம்மை பொறுத்தவரை வட்டார, மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறை என்பது சிறு பான்மை மக்களை நசுக்கும் நோக்குடனேயே கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பதை அன்றுமுதல் சொல்லி வருகிறோம். இதற்காக சிறுபான்மை இனத்தின் அமைச்சராக இருந்த மாகாணசபை, உள்ளூராட்சி அமைச்சர் அதாவுள்ளா பயன்படுத்தப்பட்டார்.
உலமா கட்சியை பொறுத்த வரை புதிய தேர்தல் முறையை நிராகரித்து வந்ததுடன் அப்படித்தான் தேவை என்றால் ஐம்பதுக்கு ஐம்பது என விகிதாசாரமும், தொகுதி முறையும் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. காரணம் இந்த புதிய முறை மூலம் கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் தமது பிரதிநிதித்துவத்தை கணிசமாக இழப்பர்.
இன்றைய அரசாங்கத்தில் பதிவு பெற்ற அனைத்து சிறுபான்மை கட்சிகளும் அங்கம் வகித்தும் அறுபதுக்கு நாற்பது என முடிவு செய்துள்ளமை சிறுபான்மை கட்சிகளுக்கு கிடைத்த தோல்வியாகும். இது விடயத்தை ஆணித்தரமாக எடுத்து சொல்ல வேண்டிய எதிர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு மவுனமாக இந்த அநீதிக்கு துணை போயுள்ளது.
ஆகவே உள்ளூராட்சி தேர்தல்கள் பழைய விகிதாசார முறைப்படி அல்லது ஐம்பதுக்கு ஐம்பது என்ற முறையிலாவது நடத்தப்பட வேண்டும் என உலமா கட்சி அரசை மீண்டும் கோருகிறது.
எம்மை பொறுத்தவரை வட்டார, மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறை என்பது சிறு பான்மை மக்களை நசுக்கும் நோக்குடனேயே கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பதை அன்றுமுதல் சொல்லி வருகிறோம். இதற்காக சிறுபான்மை இனத்தின் அமைச்சராக இருந்த மாகாணசபை, உள்ளூராட்சி அமைச்சர் அதாவுள்ளா பயன்படுத்தப்பட்டார்.
உலமா கட்சியை பொறுத்த வரை புதிய தேர்தல் முறையை நிராகரித்து வந்ததுடன் அப்படித்தான் தேவை என்றால் ஐம்பதுக்கு ஐம்பது என விகிதாசாரமும், தொகுதி முறையும் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. காரணம் இந்த புதிய முறை மூலம் கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் தமது பிரதிநிதித்துவத்தை கணிசமாக இழப்பர்.
இன்றைய அரசாங்கத்தில் பதிவு பெற்ற அனைத்து சிறுபான்மை கட்சிகளும் அங்கம் வகித்தும் அறுபதுக்கு நாற்பது என முடிவு செய்துள்ளமை சிறுபான்மை கட்சிகளுக்கு கிடைத்த தோல்வியாகும். இது விடயத்தை ஆணித்தரமாக எடுத்து சொல்ல வேண்டிய எதிர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு மவுனமாக இந்த அநீதிக்கு துணை போயுள்ளது.
ஆகவே உள்ளூராட்சி தேர்தல்கள் பழைய விகிதாசார முறைப்படி அல்லது ஐம்பதுக்கு ஐம்பது என்ற முறையிலாவது நடத்தப்பட வேண்டும் என உலமா கட்சி அரசை மீண்டும் கோருகிறது.
Comments
Post a comment