ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
இணக்க அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் பூர்த்தியானதன் பின்னர், அதிலிருந்து வெளியேறுவது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சிலர் கலந்துரையாடி வருவதாக மவ்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களே அவ்வாறு வெளியேறத் தயாராகவுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, டி.பி.ஏக்கநாயக்க, நிமல் லன்சா, அருந்திக பெர்னாண்டோ, லக்ஸ்மன் வசந்த பெரேரா, நிசாந்த முத்துஹெட்டிகம, சுசந்த புஞ்சிநிலமே, டுலிப் விஜயசேகர, சுமேதா ஜயசேன, தாராநாத் பஸ்நாயக்க, இந்திக்க பண்டாரநாயக்க, பிரியங்கர ஜயரத்ன மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரின் பெயர்கள் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுபற்றி டபிள்யூ.டி.ஜே.செனவிரத்னவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது,
அரசாங்கத்திலிருந்து வெளியேறி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளதால் எமது கட்சி வலுவிழக்கின்றதே ஒழிய வலுப்பெறவில்லை என நான் தெளிவாக ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி ஒப்பந்தம் முடிவடையும் வரை இணைந்திருக்குமாறு அவர் கூறினார். அது தொடர்பில் நாங்கள் கவனத்திற்கொண்டு ஆராய்ந்து வருகின்றோம்.
என தெரிவித்தார்.
Comments
Post a comment