முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சினால்
திருமலை மாவட்டத்துக்கு 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++
(ஆர்.ஹஸன்)
புனர்வாழ்வு
மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் 2017ஆம் ஆண்டுக்கான விசேட நிதி
ஒதுக்கீட்டில் திருகோணமலை மாவட்டத்துக்கு 20 மில்லியன் ரூபா நிதி 38
வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
யுத்தத்தால்
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டும் -
செய்யப்படாமலும் இருக்கின்ற பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்காக மேற்படி
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த புனர்வாழ்வு மற்றும்
மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், திருகோணமலை
மாவட்ட மக்கள் பிரநிதிகளின் திட்ட மும்மொழிவுகளுக்கு அமைய 38
வேலைத்திட்டங்கள் இதன் மூலம் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கமைய,
மூதூர், தம்பலகாமம், கந்தலாய், வேருகல், குச்சவெளி, கிண்ணியா, தோப்பூர்
உள்ளிட்ட பல பகுதிகளில் பாடசாலை அபிவிருத்தி, குழாய் நீர் கிணறுகள், வீதி
அபிவிருத்தி என பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமைக்
குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment