முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
திருடன், பொலிஸ்!
-----------------------------
நாங்கள் அதிகமாக
திருடர்களாகவே இருந்திருக்கிறோம்
விளையாட்டில்
முத்து பண்டாவும், சிறிபாலவும்
அதிகம் பொலிஸ்காரர்களாகவே
இருந்திருக்கிறார்கள்...
என்ன திருடினோம் என்பது
அக்கறையில்லை விளையாட்டில் - ஆனால்
பொலிஸார் எங்களை விரட்டிப்
பிடிப்பார்கள் -
பிடித்து அடிப்பார்கள்!
வயல் வெளி
காடு, மேடு,
ஒற்றையடிப் பாதைகள்
எல்லாம் ஓடி
ஊரே அமர்க்களமாகும்
எங்களது திருடன் - பொலிஸ் விளையாட்டில்!
நானும், அப்துல்லாஹ்வும்,
பெரியசாமியும், பரமநாதனும், ஜோனும்
திருடர்களாக இருந்தாலும்,
ஜோனுக்கு சில வேளை
பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி
கிடைக்கும்!
தென்னை மட்டையில்
கைத் துப்பாக்கி செய்து
எங்களை அவர்கள் விரட்டி, விரட்டிப்
பிடிப்பார்கள்!
இனம் என்றால் அப்போது
என்னவென்று தெரியாது!
ஆகவே –
இனவாதங்களைத் தூண்டி நாங்கள்
ஓடி ஒளிவதும் கிடையாது –
அவர்கள் பிடிப்பதாக விளையாடுவதும் கிடையாது!
ஊழல், மோசடி, லஞ்சம், கப்பம்
அதுவும் எங்களுக்குத் தெரியாது!
அதற்காக ஓடுவதும் கிடையாது!
இருந்தும் நாங்கள் ஓடுவதாகவும்
அவர்கள்பிடிப்பதுமாகவே
விளையாட்டு!
சின்ன ஊர்தானே
எங்கு ஓடி மறைந்தாலும்
பிடித்துவிடுவார்கள்!
நாங்கள் எங்கு போய் ஒளிவோம் என்பதும்,
எங்களை யார் ஒளித்து வைப்பார்கள் என்பதும்
அவர்களுக்குத் தெரியும் -
அதனாலேயே அவர்கள்
பொலிஸாராக வருவார்கள்!
அந்த விளையாட்டில்
பொலிஸாருக்கு யாரேனும்
லஞ்சம் கொடுப்பதில்லை
யாரும்
அழுத்தங் கொடுப்பதுமில்லை!
நாங்கள் நாங்களாகவே
ஓடி ஒளிவோம்
அவர்கள் அவர்களாகவே
துரத்திப் பிடிப்பார்கள் -
அது
விளையாட்டாக இருந்தாலும்
எவ்வளவு யதார்த்தமானது?
- இப்னு அஸூமத்
-----------------------------
நாங்கள் அதிகமாக
திருடர்களாகவே இருந்திருக்கிறோம்
விளையாட்டில்
முத்து பண்டாவும், சிறிபாலவும்
அதிகம் பொலிஸ்காரர்களாகவே
இருந்திருக்கிறார்கள்...
என்ன திருடினோம் என்பது
அக்கறையில்லை விளையாட்டில் - ஆனால்
பொலிஸார் எங்களை விரட்டிப்
பிடிப்பார்கள் -
பிடித்து அடிப்பார்கள்!
வயல் வெளி
காடு, மேடு,
ஒற்றையடிப் பாதைகள்
எல்லாம் ஓடி
ஊரே அமர்க்களமாகும்
எங்களது திருடன் - பொலிஸ் விளையாட்டில்!
நானும், அப்துல்லாஹ்வும்,
பெரியசாமியும், பரமநாதனும், ஜோனும்
திருடர்களாக இருந்தாலும்,
ஜோனுக்கு சில வேளை
பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி
கிடைக்கும்!
தென்னை மட்டையில்
கைத் துப்பாக்கி செய்து
எங்களை அவர்கள் விரட்டி, விரட்டிப்
பிடிப்பார்கள்!
இனம் என்றால் அப்போது
என்னவென்று தெரியாது!
ஆகவே –
இனவாதங்களைத் தூண்டி நாங்கள்
ஓடி ஒளிவதும் கிடையாது –
அவர்கள் பிடிப்பதாக விளையாடுவதும் கிடையாது!
ஊழல், மோசடி, லஞ்சம், கப்பம்
அதுவும் எங்களுக்குத் தெரியாது!
அதற்காக ஓடுவதும் கிடையாது!
இருந்தும் நாங்கள் ஓடுவதாகவும்
அவர்கள்பிடிப்பதுமாகவே
விளையாட்டு!
சின்ன ஊர்தானே
எங்கு ஓடி மறைந்தாலும்
பிடித்துவிடுவார்கள்!
நாங்கள் எங்கு போய் ஒளிவோம் என்பதும்,
எங்களை யார் ஒளித்து வைப்பார்கள் என்பதும்
அவர்களுக்குத் தெரியும் -
அதனாலேயே அவர்கள்
பொலிஸாராக வருவார்கள்!
அந்த விளையாட்டில்
பொலிஸாருக்கு யாரேனும்
லஞ்சம் கொடுப்பதில்லை
யாரும்
அழுத்தங் கொடுப்பதுமில்லை!
நாங்கள் நாங்களாகவே
ஓடி ஒளிவோம்
அவர்கள் அவர்களாகவே
துரத்திப் பிடிப்பார்கள் -
அது
விளையாட்டாக இருந்தாலும்
எவ்வளவு யதார்த்தமானது?
- இப்னு அஸூமத்
Comments
Post a comment