முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
SNM.Suhail-
சிகிச்சை மற்றும் இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்காவுக்கு சென்று நேற்றுமுன்தினம் நாடு திரும்பிய பிரதமரிடம் அண்மைக்காலமாக இலங்கையில் மோசமடைந்துள்ள இனவாத செயற்பாடுகள் குறித்து ஐ.தே.க. எம்.பி.க்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் மாலை அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வரவேற்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விமான நிலையத்தின் விஷேட அதிதிகளுக்கான வெளியேறும் பகுதிக்கு சென்றிருந்தனர்.
பிரதமர் வந்தடைந்ததும் நாட்டு நிலைமைகள் குறித்து அங்கு கதையாடல் இடம்பெற்றது. இதன்போது, அமைச்சர் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா, தற்போது நாட்டில் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமரிடம் வினவினார்.
அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் இதன்போது, தற்போது இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான கெடுபிடிகள் குறித்து பிரதமரிடம் விபரித்துள்ளனர். இதுகுறித்து கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி ஆராய்வதாக பிரதமர் விமான நிலையத்தில் தெரிவித்ததுடன் அங்கு பொலிஸ்மா அதிபருடனும் கலந்துரையாடினார்.
Comments
Post a comment