அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
வவுனியா
தமிழ் மத்திய மகாவித்யாலயத்திற்கு நல்லெண்ண நோக்குடன் வன்னி மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர்
மஸ்தான் இன்று (14.03.2017) திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார்.
இந்த
விஜயத்தின்போது பாடசாலை அதிபர்.T தர்மலிங்கத்தினால் மஸ்தான் எம்.பி
வரவேற்கப்பட்டதுடன் பாடசாலை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்றும்
இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாகவும் பாடசாலையின் அத்தியவசிய தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இதில
மைதானப்புணரமைப்பு, பாடசாலைத்தளபாடப்பற்றாக்குறை என்பனவற்றுடன் மழை
காலங்களில் வவுனியா பிரதான பொலிஸ் நிலையம், வீடுகள் உட்பட
மேட்டுப்ப்பகுதியில் இருந்துவரும் மழை நீர் பாடசாலை வளாகத்தினூடாக
சென்றடைவதினால் பாரிய அசௌகரியங்களை தாம் எதிர்கொள்வதாக அதிபர் தர்மலிங்கம்
தெரிவித்தார்.
இதனையப்டுத்து குறித்த சிக்கல் நிலைமையினை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக மஸ்தான்.எம்பி தெரிவித்தார்
குறித்த கலந்துரையாடலில் பாடசாலையின் ஆசிரியர்கள், அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்களும் கலந்துகொண்டனர்.
அத்துடன்
பாடசாலை வளாகத்தின் பிரச்சினைக்குரிய பகுதிகளை அவதானித்த மஸ்தான் எம்.பி
மிக விரைவில் தாம் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும்
வாக்குறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment