அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் அடுத்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தின்கீழ், நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் ஜாதிக ஹெல உறுமய போட்டியிட்டது.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, கடந்த நாடாளுமன்றத் தேர்தரலை முன்னிட்டு, 2015 ஜீலை மாதம் 05 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான இந்தக் கூட்டணயில் ஏழு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் போட்டியிட்ட இந்தக் கூட்டணியில் 106 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Comments
Post a comment