அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
ஜனாதிபதிக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடிதம்
++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++
1804
ஜுன் 07ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரித்தானிய
அரசாங்கத்தினால் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட கிழக்கு மாகாண
முஸ்லிம்கள் 7 பேருக்கும் மேலதிகமாக அந்த வர்த்மானி அறிவித்தலில்
உள்ளடங்கியுள்ள ஏனைய 183 பேரையும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்த
நடவடிக்கை எடுக்குமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க
அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்
கோரிக்கை விடுத்துள்ளார்.
1804ஆம்
ஆண்டு ஜுன் 07ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுடன்,
அவர்களுடைய பெயர் விபரங்களையும் உள்ளடக்கி ஜனாதிபதிக்கு இன்று புதன்கிழமை
அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
1818
ஆம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸ பகுதியில் பிரித்தானிய அரசுக்கு எதிராக கிளர்ச்சி
செய்த சிங்களத் தலைவர்கள் 19 பேர் நாட்டின் தேசிய வீரர்களாக வர்த்தமானி
அறிவித்தல் மூலம் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்தார். இந்நிலையில்,
பிரித்தானிய அரசால் தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு
மாகாணத்தைச் சேர்ந்த 7 முஸ்லிம்களையும் நாட்டுக்காக போராடிய முஸ்லிம்
தலைவர்கள் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்குமாறு கோரி இராஜாங்க
அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதிக்கு கடந்த ஜனவரி 24ஆம் திகதி கடிதம்
அனுப்பி வைத்திருந்தார்.
இக்கோரிக்கை
ஏற்று ஜனாதிபதி அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு நீதி அமைச்சர்
விஜயதாசவுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். விரைவில் அவர்களது பெயர்
பட்டியல் தேசிய வீரர்களாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
1804ஆம் ஆண்டு தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட ஏனைய 183 பேரையும்
தேசிய வீரர்களாக அறிவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்குமாறு சிவில்
அமைப்புக்கள் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கோரிக்கை
விடுத்திருந்தன. இதற்கமைய, 1804 ஆம் ஆண்டு ஜுன் 07ஆம் திகதி வெளியிடப்பட்ட
வர்த்தமானி அறிவித்தலை மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் தேடி எடுத்து அதில்
உள்ளடங்கியுள்ள அனைவரையும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்த நடவடிக்கை
எடுக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதிக்கு கடிதம்
அனுப்பி வைத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment