ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
( மினுவாங்கொடை நிருபர் )
மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலய இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், (31) செவ்வாய்க் கிழமை பிற்பகல் ஒரு மணி முதல், கல்லொழுவை - அழுத் மாவத்தை, முனாஸ் ஹாஜி விளையாட்டுத் திடலில், வித்தியாலய அதிபர் எம்.எச்.எம். காமில் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இஸ்தான்புல் ( பச்சை ), குருதுபா ( நீலம் ), பக்தாத் ( சிவப்பு ) ஆகிய இல்லங்களுக்கு இடையில் நடைபெறவுள்ள இவ்வில்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில், மினுவாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. டப்ளியூ. ஆர். பெரேரா பிரதம அதிதியாகவும் மற்றும் கல்வி அதிகாரிகள், கல்விமான்கள் பலர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Comments
Post a comment