அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
-எம்.வை.அமீர்-
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சையில் திறமையாக சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2017. 01. 18 ஆம் திகதி சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது சமூக நலன்புரி மன்றத்தின் தலைவர் வைத்திய கலாநிதி எம்.எம்.ஏ.றிஷாத் தலைமையில், சமூக நலன்புரி மன்றத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியக் கலாநிதி என். ஆரிப் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்கள் பிரதம அதிதியாகவும், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பி.எம்.எம்.பதுர்தீன் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட பல் வேறு பிரிவுகளையும் சேர்ந்த கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மற்றும் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்விகற்ற சுமார் 44 மாணவர்கள் இங்கு பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின்போது உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் மற்றும் உயர் தேர்ச்சியுற்ற உயர்தர மாணவர்களும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment