அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
உள்ளுராட்சி தேர்தலில் வாக்களிப்பு முறை ஐம்பதுக்கு ஐம்பது என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நிலைக்கு சிறு பான்மை கட்சிகள் முன் வந்துள்ளமையை உலமா கட்சி வரவேற்றுள்ளது. கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த அரசாங்க காலத்தின் போது உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சராக அதாவுள்ளா இருந்த போது முன்னாள் அமைச்சர் டினேஷ் குணவர்த்தனவினால் தயாரிக்கப்பட்ட உள்ளுராட்சி தேர்தல் முறை மாற்றத்தை அன்று முதல் இன்று வரை உலமா கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தேர்தல் மாற்றம் என்பது சிறுபான்மை மக்களின் அரசியல் பலத்தை மலினப்படுத்த எடுக்கும் முயற்சி என்றே உலமா அன்றும் கூறியது. ஆனாலும் அது பாராளுமன்றத்துக்கு வந்த போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அரசாங்கத்தில் இருந்த சிறுபான்மை கட்சிகள் அதனை ஏற்று வாக்களித்தன.
அதன் பின் இது விடயத்தில் முரண்பட்ட மு. கா செயலாளர் ஹசனலி நாற்பதுக்கு அறுபது என இருக்க வேண்டும் என அறிக்கை விட்டார். இதனை உலமா கட்சி வன்மையாக மறுத்ததுடன் வட்டார, தொகுதி முறை தேவையில்லை என்றும் அப்படித்தான் தேவை என்றால் ஐம்பதுக்கு ஐம்பது என்ற ரீதியில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் கூறியது. ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் ஒரு விதமாகவும், மக்கள் முன் இன்னொரு விதமாகவும் நடித்ததால் பணமும் பதவியும் கொடுத்தால் வாய் அடங்கி விடுவர் என்பதை கடந்த அரசு தெளிவாக புரிந்திருந்ததால் மு. கா வின நாற்பதுக்கு அறுபது என்பதை அரசு ஏற்கவில்லை.
இத்தகையதொரு சூழ் நிலையில் நாட்டில் இனவாதம் இல்லாத, சமத்துவ நாட்டை உருவாக்கப்போகிறோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசு ஒரு படி மேல் சென்று பெண்களுக்கு 25 வீதம் போன்ற சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்தியது. அதற்கும் முஸ்லிம் காங்கிரஸ் துணை போனது. அத்துடன் கடந்த அரசால் தயாரிக்கப்பட்ட தேர்தல் முறையையே பாராளுமன்றத்தில் நிறை வேற்ற தற்போது துடிக்கிறது. இதனை மஹிந்த அரசில் எம்மால் எதுவும் முடியவில்லை, இந்த அரசில் சாதிப்போம் என கூறிய சிறுபான்மை கட்சிகள் இன்று எதுவும் சாதிக்க முடியாமல் தட்டுத்தடுமாறிக்கொண்டிருப்பது கவலையளிக்கிறது.
உண்மையில் சிறு பான்மை மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து தமது தொகுதிகளில் அவரை வெல்ல வைத்து அவரோடு நட்பு பாராட்டியிருந்தால் இவற்றை மிக இலகுவாக சாதித்திருக்க முடியும். ஏனைய ஆட்சியாளர்களை விட பல நன்மைகளை மஹிந்த ராஜபக்ஷ சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். வடக்கு கிழக்கு பிரிப்பு, பயங்கரவாத ஒழிப்பு, கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர், மௌலவி ஆசிரிய நியமனம், முஸ்லிம் கலாச்சார திணைக்களத்துக்கு புதிய கட்டிடம், பலஸ்தீன சார்பு நிலைப்பாடு என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
ஆகவே உள்ளுராட்சி தேர்தலை அரசு விகிதாசார முறையிலேயே உடனடியாக நடத்த வேண்டும் என்பதில் சிறு பான்மை கட்சிகள் உறுதியாக இருக்க வேண்டும். நக்குண்டார் நாவிழந்தார் என்றிராமல் சிறுபான்மை மக்களின் இந்த உரிமைக்காக போராட தமிழ் முஸ்லிம் கட்சிகள் முன்வரவேண்டும். ஆக குறைந்தது ஐம்பதுக்கு ஐம்பது என்ற ஏற்கனவே உலமா கட்சியில் முன் வைக்கப்பட்ட யோசனையையாவது வென்றெடுக்க வேண்டும். பாராளுமன்றத்தில் எதிர் தரப்பில் முஸ்லிம் எவரும் இல்லாமை காரணமாக முஸ்லிம் மக்களின் இது சம்பந்தமான குரல் ஒலிக்க முடியாமல் உள்ளது. ஆனாலும் எதிர் தரப்பில் பல தமிழர்கள் இருப்பதால் அவர்களும் இந்த தேர்தல் முறை மாற்றத்துக்கெதிராக குரல் எழுப்ப வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
கடந்த அரசாங்க காலத்தின் போது உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சராக அதாவுள்ளா இருந்த போது முன்னாள் அமைச்சர் டினேஷ் குணவர்த்தனவினால் தயாரிக்கப்பட்ட உள்ளுராட்சி தேர்தல் முறை மாற்றத்தை அன்று முதல் இன்று வரை உலமா கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தேர்தல் மாற்றம் என்பது சிறுபான்மை மக்களின் அரசியல் பலத்தை மலினப்படுத்த எடுக்கும் முயற்சி என்றே உலமா அன்றும் கூறியது. ஆனாலும் அது பாராளுமன்றத்துக்கு வந்த போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அரசாங்கத்தில் இருந்த சிறுபான்மை கட்சிகள் அதனை ஏற்று வாக்களித்தன.
அதன் பின் இது விடயத்தில் முரண்பட்ட மு. கா செயலாளர் ஹசனலி நாற்பதுக்கு அறுபது என இருக்க வேண்டும் என அறிக்கை விட்டார். இதனை உலமா கட்சி வன்மையாக மறுத்ததுடன் வட்டார, தொகுதி முறை தேவையில்லை என்றும் அப்படித்தான் தேவை என்றால் ஐம்பதுக்கு ஐம்பது என்ற ரீதியில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் கூறியது. ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் ஒரு விதமாகவும், மக்கள் முன் இன்னொரு விதமாகவும் நடித்ததால் பணமும் பதவியும் கொடுத்தால் வாய் அடங்கி விடுவர் என்பதை கடந்த அரசு தெளிவாக புரிந்திருந்ததால் மு. கா வின நாற்பதுக்கு அறுபது என்பதை அரசு ஏற்கவில்லை.
இத்தகையதொரு சூழ் நிலையில் நாட்டில் இனவாதம் இல்லாத, சமத்துவ நாட்டை உருவாக்கப்போகிறோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசு ஒரு படி மேல் சென்று பெண்களுக்கு 25 வீதம் போன்ற சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்தியது. அதற்கும் முஸ்லிம் காங்கிரஸ் துணை போனது. அத்துடன் கடந்த அரசால் தயாரிக்கப்பட்ட தேர்தல் முறையையே பாராளுமன்றத்தில் நிறை வேற்ற தற்போது துடிக்கிறது. இதனை மஹிந்த அரசில் எம்மால் எதுவும் முடியவில்லை, இந்த அரசில் சாதிப்போம் என கூறிய சிறுபான்மை கட்சிகள் இன்று எதுவும் சாதிக்க முடியாமல் தட்டுத்தடுமாறிக்கொண்டிருப்பது கவலையளிக்கிறது.
உண்மையில் சிறு பான்மை மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து தமது தொகுதிகளில் அவரை வெல்ல வைத்து அவரோடு நட்பு பாராட்டியிருந்தால் இவற்றை மிக இலகுவாக சாதித்திருக்க முடியும். ஏனைய ஆட்சியாளர்களை விட பல நன்மைகளை மஹிந்த ராஜபக்ஷ சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். வடக்கு கிழக்கு பிரிப்பு, பயங்கரவாத ஒழிப்பு, கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர், மௌலவி ஆசிரிய நியமனம், முஸ்லிம் கலாச்சார திணைக்களத்துக்கு புதிய கட்டிடம், பலஸ்தீன சார்பு நிலைப்பாடு என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
ஆகவே உள்ளுராட்சி தேர்தலை அரசு விகிதாசார முறையிலேயே உடனடியாக நடத்த வேண்டும் என்பதில் சிறு பான்மை கட்சிகள் உறுதியாக இருக்க வேண்டும். நக்குண்டார் நாவிழந்தார் என்றிராமல் சிறுபான்மை மக்களின் இந்த உரிமைக்காக போராட தமிழ் முஸ்லிம் கட்சிகள் முன்வரவேண்டும். ஆக குறைந்தது ஐம்பதுக்கு ஐம்பது என்ற ஏற்கனவே உலமா கட்சியில் முன் வைக்கப்பட்ட யோசனையையாவது வென்றெடுக்க வேண்டும். பாராளுமன்றத்தில் எதிர் தரப்பில் முஸ்லிம் எவரும் இல்லாமை காரணமாக முஸ்லிம் மக்களின் இது சம்பந்தமான குரல் ஒலிக்க முடியாமல் உள்ளது. ஆனாலும் எதிர் தரப்பில் பல தமிழர்கள் இருப்பதால் அவர்களும் இந்த தேர்தல் முறை மாற்றத்துக்கெதிராக குரல் எழுப்ப வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
Comments
Post a comment