இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக
முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்திற்குற்பட்ட தண்ணீரூற்று
மு.ம.வித்தியாலயத்தில் சாதாரன தரப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள் பர்தா
அணிந்துகொண்டு பரீட்சை எழுதுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை பெற்றோர்கள் மத்தியில்
கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் பற்றி அறிந்துகொண்ட தண்ணீரூற்று முஸ்லிம் மகா
வித்தியாலய அதிபர் இதுதொடர்பில் முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலக பதில் கல்விப்
பணிப்பாளருடன் தொடர்புகொண்டு நிலைமையை கூறியுள்ளார்.
இதனையடுத்து, புதன்கிழமையிலிருந்து
பரீட்சை எழுத வருகை தரும் முஸ்லிம் மாணவிகளை பெண் பரிசோதகர் ஒருவர் மூலர் பரிசோனை
செய்த பின்னர் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிப்பதாக முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலக
பதில் கல்விப் பணிப்பாளர் வாக்குறுதியளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், ஐக்கிய தேசியக்கட்சியின்
முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் ஜமால்தின் ரிசாம் ஆகியோருக்கும்
தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, இந்த
சம்பவம் பற்றி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் முல்லைத்தீவு கிளையின்
செயலாளர், பரீட்சை
திணைக்களத்தின் பிரதி ஆணையாளரிடம் முறையிட்டுள்ளார்.
(அஸீம் கிலாப்தீன்)]
Comments
Post a comment