இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக
முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட கூட்டத்துக்கு கட்சியின் செயலாளர் ஹசனலி சமூகமளிக்காமை என்பது சிறந்ததொரு அரசியல் ராஜதந்திரமாகும். ஏனென்றால் ஒரு கட்சியின் உயர் பீட கூட்டத்தை கூட்டும் அதிகாரம் செயலாளருக்கே உண்டு. கட்சிகளின் யாப்புகளில் எப்படி எழுதப்பட்டிருந்தாலும் தேர்தல் ஆணையாளரைப்பொறுத்த வரை இதுவே எழுதப்பட்ட சட்டமாக உள்ளது.
செயலாளரால் உயர் பீட கூட்டம் கூட்ட முடியாத நிலைமையின் அவரது அனுமதியுடன் வேறு யாரும் கூட்டலாம்.
சட்டம் இப்படியிருக்க அரசியல் கட்சியொன்றை எப்படி கொண்டு செல்வது என்பது தெரியாத தலைவர் உயர் பீட கூட்டம் கூட்டும்படி செயலாளருக்கு தொடர்ச்சியாக எழுத்து மூலம் கோரிக்கை விடாமல் கட்சியின் உயர் பீடம் கூட்டப்பட்டுள்ளது. சட்டம் தெரியாத போராளி கோமாளிகளும் செலவு செய்து கொழும்பு வந்து ஏமாந்து போயுள்ளனர்.
தலைவரால் சட்டத்துக்கு மாற்றமாக கூட்டப்பட்ட கூட்டத்துக்கு செயலாளர் சமூகமளிக்க வேண்டிய கடப்பாடு இல்லை. உடனடியாக தலைவரும் ஹசனலியும் இணைந்து தற்போதும் செயலாளர் அவர்தான் என அறிவித்தால் அதனை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொள்வார். அவ்வாறு நிகழும் போது இத்தனை காலமும் ஒரு மொக்கரைத்தான் தானைத்தலைவன் என நம்பி ஏமாந்துள்ளோம் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் வாக்காளர்கள் தெரிந்து கொள்வார்கள்.
அவ்வாறு கடிதம் வழங்கப்படாவிட்டால் இது விடயம் நீதி மன்றத்துக்கே செல்லும். அதற்கு செயலாளர் பொறுப்பல்ல, சுயநல, பதவி வெறிபிடித்த ஏமாற்றுத்தலைமையின் தந்திரமே பொறுப்பாகும்.
- முபாறக் அப்துல் மஜீத்
செயலாளரால் உயர் பீட கூட்டம் கூட்ட முடியாத நிலைமையின் அவரது அனுமதியுடன் வேறு யாரும் கூட்டலாம்.
சட்டம் இப்படியிருக்க அரசியல் கட்சியொன்றை எப்படி கொண்டு செல்வது என்பது தெரியாத தலைவர் உயர் பீட கூட்டம் கூட்டும்படி செயலாளருக்கு தொடர்ச்சியாக எழுத்து மூலம் கோரிக்கை விடாமல் கட்சியின் உயர் பீடம் கூட்டப்பட்டுள்ளது. சட்டம் தெரியாத போராளி கோமாளிகளும் செலவு செய்து கொழும்பு வந்து ஏமாந்து போயுள்ளனர்.
தலைவரால் சட்டத்துக்கு மாற்றமாக கூட்டப்பட்ட கூட்டத்துக்கு செயலாளர் சமூகமளிக்க வேண்டிய கடப்பாடு இல்லை. உடனடியாக தலைவரும் ஹசனலியும் இணைந்து தற்போதும் செயலாளர் அவர்தான் என அறிவித்தால் அதனை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொள்வார். அவ்வாறு நிகழும் போது இத்தனை காலமும் ஒரு மொக்கரைத்தான் தானைத்தலைவன் என நம்பி ஏமாந்துள்ளோம் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் வாக்காளர்கள் தெரிந்து கொள்வார்கள்.
அவ்வாறு கடிதம் வழங்கப்படாவிட்டால் இது விடயம் நீதி மன்றத்துக்கே செல்லும். அதற்கு செயலாளர் பொறுப்பல்ல, சுயநல, பதவி வெறிபிடித்த ஏமாற்றுத்தலைமையின் தந்திரமே பொறுப்பாகும்.
- முபாறக் அப்துல் மஜீத்
Comments
Post a comment