இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக
-எம்.வை.அமீர் -
அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்டுள்தாகக்
கூறப்படும் பதவிநிலைப்போட்டிகள் காரணமாக ஏற்கனவே அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படும் என வாக்களிக்கப்பட்ட தேசியப்பட்டியல்
விவகாரம் கைநழுவிப்போய் விடுமா?.. என்ற சந்தேகம் அட்டாளைச்சேனை பிரதேச மக்கள்
மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறானதொரு சூழல் ஏற்படும் பட்சத்தில் அட்டாளைச்சேனை
மக்கள் தொடர்ந்தும் பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் என்றும் அட்டாளைச்சேனை
அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளன தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட
விரிவுரையாளருமான எ.ல் .ஹனீஸ் தெரிவித்தார்.
கடந்த காலங்களில்
அட்டாளைச்சேனை மண் பல சந்தர்ப்பங்களிலும் அரசியல் ஏமாற்றுதலுக்கு உட்பட பிரதேசம், ஸ்ரீலங்கா
முஸ்லீம் காங்கிரஸுக்கு ஆரம்ப காலம் தொட்டு இப்பிரதேசம் 95% வாக்களித்தும்
வந்துள்ளது. இருந்த போதிலும் அட்டாளைச்சேனைக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களால் தேசியப்பட்டியல்
மூலம் பாராளுமன்ற பிரதிநித்துவம் தருவதாக
அட்டாளைச்சேனை மண்ணிலும் ,ஏனைய ஊர்களிலும் பகிரங்கமாக வழங்கிய
வாக்குறிதி இது வரையும் வெறும் வாக்குறுதியாகவே உள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் அட்டாளைச்சேனை மக்களின் உணர்வுகளை மதித்து நடப்பார்
என்று தான் பெரிதும் நம்புவதாகவும், அதுவரையும் மக்கள் சற்று பொறுமைகாக்க வேண்டும்
என்றும் குறிப்பிட்ட அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளன தலைவரும்
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான எ.ல் .ஹனீஸ், இது விடயத்தில்
அட்டாளைச்சேனை மக்கள் மிகவும் விழிப்புடனும், எதிர்பார்ப்புடனும் இருப்பதாகவும்
தெரிவித்தார்.
Comments
Post a comment