ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
ரிம்சி ஜலீல்
நேற்றிரவு குருநாகல், நிக்கவரெட்டிய பிரதேச ஜும்மா பள்ளிவாயல் மீது
விஷமிகளால் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடைபெற்றதாக அறிய முடிகிறது.
5 போத்தல்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு சுமார் 2 மணியளவில் இடம்பெற்ற
இந்த தாக்குதல் நடத்தபட்டுள்ளது.
இந்த விடையம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி
ஜவஹர்ஷா உரிய தரப்பினரை தொடர்புகொண்டு விடயங்களை கையாண்டு வருகிறார்
அத்துடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கவனத்திற்க்கு இந்த விடையம்
கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பள்ளிவாசலின் உடைமைகள் சில சேதமாகி உள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்ட
பெட்ரோல் குண்டுக்கு பயன்படுத்தப்பட்ட போத்தல்களை கைப்பற்றி மேலதிக
விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு குருநாகல், நிக்கவரெட்டிய பிரதேச ஜும்மா பள்ளிவாயல் மீது
விஷமிகளால் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடைபெற்றதாக அறிய முடிகிறது.
5 போத்தல்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு சுமார் 2 மணியளவில் இடம்பெற்ற
இந்த தாக்குதல் நடத்தபட்டுள்ளது.
இந்த விடையம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி
ஜவஹர்ஷா உரிய தரப்பினரை தொடர்புகொண்டு விடயங்களை கையாண்டு வருகிறார்
அத்துடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கவனத்திற்க்கு இந்த விடையம்
கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பள்ளிவாசலின் உடைமைகள் சில சேதமாகி உள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்ட
பெட்ரோல் குண்டுக்கு பயன்படுத்தப்பட்ட போத்தல்களை கைப்பற்றி மேலதிக
விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a comment