ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
(அஷ்ரப் ஏ சமத்)
விங்ஸ்
விழா 2016 (நம்பிக்கையில் சர்வதேச மாநாடு இன்று(7) முன்னாள்
ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் பி..எம்.ஜ.சி.எச் சில் ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
கடந்த
30 வருட கால யுத்தம் ஓய்வடைந்தாலும் வட கிழக்கில் வாழும் மக்களது
துயரங்கள் இன்னும் ஓயவி்ல்லை, யுத்தம் முடிவடைந்தாலும் சமாதானத்தினை
ஏற்படுத்துவது கடினம். யுத்ததினால் பங்கு கொண்டவா்கள் ஏதோ ஒரு வகையில்
இழப்பினை சந்தித்துள்ளா். அதில் இருந்து அவா்கள் இன்னும் வெளிவரவில்லை.
இலங்கையில் இன்றும் இந்த அரசின் புதிய கொள்கையடிப்படையில் அவா்களுக்கு
சமாதாணக் கதவுகள் திறக்கப்பட்டே இருக்கின்றது. யுத்த்தினால்
இடம்பெயா்ந்தவா்கள் சொந்தங்களை இழந்த பெண்கள் உறவினா்கள் தமக்குரிய
தஜ்தாவேஜூகளைக் கூட பெறமுடியாமல் உள்ளனா். என முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்க உரையாற்றினாா்.
இன்றைய
பி.எம். ஜ.சி.எச்சில் நடைபெற்ற விங்ஸ் சர்வசேதச மாநாட்டின் ஆரம்ப
வைபவத்தில் கலந்து கொண்டு உரையறாற்றுகையிலேயே மேற்கண்டவாறு முன்னாள்
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தாா் இம் மாநாட்டில் உ
ள்நாட்டு பிரநிதிகள் மற்றும் வெளிநாட்டுப் பிரநிதிகள் கலந்து கொண்டனா்
ஆரம்ப விழாவில் கத்மன்டு பத்திரிகை ஆசிரியா், ஜேர்மன் நாட்டின் துாதுவா்,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் உரையாற்றினாா்கள்.
அமைச்சா் ரவுப் ஹக்கீமும் மற்றும் பல அரசியல் பிரநிதிகளும் கலந்து
கொண்டனா்
தொடா்ந்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
ஒரு
பன்முகம் கொண்ட பங்கேற்கும் தன்மையுடைய செயன்முறையாக நல்லிணக்கத்தை
பிம்படுத்துவதற்கு பங்களிப்பதற்கு அனைத்துப் பின்னணிகளிலும் சகல பிரஜைகளை
ஒன்றிணைத்துக் கொண்டு கலைகள். சிந்தனை மற்றும் உணவு சாா்ந்த ஒரு
கொண்டாட்டமே ” விங்ஸ் விழாவாகும். இவ் விழா ஏற்கனவே ஓக்டோபா் 21,22,23
கிளிநொச்சியிலும் , ஒக்டோபா் 27,28,29 அம்பாறை காரைதீவிலும் நடைபெற்றன.
அங்கு அப்பிரதேச இளைஞா்கள் யுவதிகள் தத்தமது கலைகளை ஏனைய சமுகங்களோடு
பகிா்ந்து கொண்டனா். இன்று கொழும்பில் 7,8.9. ஆம் திகதிகளில் இவ்
இளைஞா்கள் ஒன்று கூடி தமது கலை கலாச்சாரம், குறுந்திரைப்படம், தத்தமது
உணவுகள் போன்றவற்றை வெளிப்படுத்துவாா்கள். இதில் கலந்து கொள்ள வெளிநாட்டு
பிரஜைகள் வருகை தந்துள்ளனா் இம் மாநாடு வெற்றியளிக்க ஜேர்மன், கெயாா்,
ஜரோப்பிய யுணியன், தேசிய நல்லிணக்க அலுவலகம், செயல்பட்டுவருகின்றனா்.
கலை
நிகழ்ச்சியானது கலைத்துவச் செயன்முறைகள் மற்றும் உருவாக்கங்கள், மூலமாக
நல்லிணக்க எண்ணக்கருவை அணுகும் வகையில் நாடு முழுவதிலிருந்து கலைஞா்கள்
செயன்முறையாளா்கள் எழுத்தாளா்கள், மற்றும் குழுக்களினால் வடிவமைக்கப்பட்ட
ஆடல் நாடகம், நிகழ்வுகள், அரங்கம், கண்காட்சிகள் கட்புலக் கலைகள், குறும்
படங்கள், மற்றும் இலக்கியங்களைக் கொண்டிருக்கும். நிகழ்ச்சியில்
காணப்படும் கலைப்படைப்பு சமுகங்களை ஒன்றுபடுத்தி கொண்டுவருவதற்கு
முயலுகின்ற ஒரு பல்வகையான அணுகுமுறைகள் மற்றும் நடைமுறைகளைக் கூறுகின்றது.
வடக்கு
கிழக்கு வாழ் இளைஞா்கள் யுத்தம் முடிவடைந்து பல வருடங்களைக் கடந்தும்
இன்றும் அவா்கள் உள்ளங்களில் தமது துயர்படைத்த இழப்புக்களின் அனுபவித்த
துண்பங்களைச் சூழ்ந்த கடினமான கலந்துடையாடல்கள் அவா்களது உண்மைகளை ஏற்றுக்
கொள்ளுதல் ஆகும். இந்தப் பின்ணனயில்
நல்லிணக்கம், மற்றம் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் ஒரு முக்கியமான
கவனத்திற்குரியவையாகவும் மற்றும் ஓர் அறிவாா்ந்த ரீதியான
ஆராய்ச்சிக்குரியதொரு படைப்புக்கள் ஒரு முக்கிய கவணத்திற்குரியவையாககும்.
எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அங்கு உரயாற்றினாா்.
Comments
Post a comment