எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
இன்னும் ஒதுங்கவில்லையா நீ
பாதங்களில் அணிந்திருப்பவற்றை கன்னங்களுக்கு
ஓங்குவதை நாம்
வெறுக்கிறோம்
பிடிபிடியாய் அரிசி சேர்த்து
நேர்ந்த முட்டிக்குள்
வருடத்தை எல்லாம் ரமளான்களாக்கி
தவமிருந்து எம்முடையோர்
உயிரைக் குரிதியாய் பீறிட ஓடவிட்டு நோக்காடே வாழ்க்கையாக்கி
பெற்றெடுத்த செல்வ மரத்தை
ஆளுக்கு ஒருபுறமாய் கூறு போட்டுக்கிழித்து
அண்ணனுக்கும் மச்சானுக்கும் சொகுசுக்கட்டில்கள் செய்து மீதமுள்ள சொச்சத்தை கோடிகளுக்கு விற்று பூமியிலுள்ள சுவனங்களை எல்லாம்
உங்களுக்கு சொந்தமாக்கி
சதிகாரக்கூட்டத்தின் பொறாமை வலையில் தலைவனையும் பறி கொடுத்து,
எம் தேசியம்
நாதியில்லாத மக்களாய் நடுத்தெருவுக்கு வந்தது போதாதா
இ்னி ஒரு கணமும் அனுமதியில்லை
விட்டு விட்டு ஓடுங்கள்!
எம் உயிரினும் மேலான் உடன் பிறப்புக்களை நாம் பார்த்துக்கொள்கிறோம்
எமது இறைவன்
எல்லாம் வல்லோன்
அல்லாஹ்தஆலா
அவன் புறத்திலிருந்து தந்துள்ளான் ஞானத்தை
குர் ஆன் ஹதீஸ் எனும் ரூபங்களில்
என்ன பாஷையில் பேச விரும்புகிறீர்கள்
ஆண்டு முடித்த ஆங்கிலத்திலா
ஆழப்போகும் தமிழிலா?
எதுவானாலும் நாம்தயார்
எம்மிடம் இன்னுமொரு பாஷையும் உண்டு
உங்களால் பேச முடியாதது அது
உங்கள் தர்பார்களை தவிடு பொடியாக்கும் எம் தவப்பிராத்தனைகள் அவை!
எம் தேசியத்தின் ஒவ்வொரு கலங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்துடிப்பு!
அரநாயக்க அந்தரங்கங்கங்களையும் ஆதாரத்துடன் கொண்டுவருவோம்
அதற்குமுன் வேரையும் அறுத்து
காயவைத்துப் பல்லுக்குத்திகள் செய்யும் கம்பேனிகளுக்கு சில்லறை விலைக்கு வித்துவிட விலைபேசிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம்
செத்தாலும் விடமாட்டோம்!
நம் பூர்வீகப்பூமியை
சாத்தான்களுக்கு விற்றுவிட
விட்டுவிடுவோமா
இடையில் புகுந்தவனே
உடுதுணியையும் எடுக்கவிடாமல்
விரட்டியக்கப்பட்டஎம் உறவுகள்
இன்னும் வீதிகளில் தூங்குகின்றனர்
மீதியிருக்கும் எம்மையும்
காசுக்கு வித்துவிடலாமென்று
கனவு காணாதே கயவனே
உயிருக்கு உயில் எழுதி முடித்தவர்கள் நாங்கள்
இந்தப்புலிகளும் சேனைகளும் ஒரு மூச்சுக்கு தாங்காது
மரணம் எமது சுவனத்துக்கு தடை என நம்புவோர் நாங்கள்
நீ எம்மாத்திரடமடா எங்களுக்கு
பேனையோடு முடித்துக்கொள்ள விரும்புகின்றோம்
சொல்லாமல் பாயைக்கட்டடா
நட்டிய எங்களுக்கு தெரியும்
வேரிலிருந்து இன்னுமோர் மீட்சி செய்ய
யாரடா நீ எம்மை ஆழ
நாம் ஆழப்பிறந்தவர்கள்
எம்மவனுக்கு மட்டுமே மந்தைகளாவோம்.
ஓடிவிடுங்கள்
கூட்டங்களோடு
அவசரமாய்
உங்கள் மானங்களை இன்னும் நாம் மதிக்கின்றோம்.
ஆயினும் வாக்குறுதிகள் நிபந்தனைக்கு உட்பட்டவை.
உன்னையே பதச்சோறாய் கணித்து
எம் தேசியம் காறி உமிழப்படுவதை இனி ஒரு கணமும் அனுமதிக்க முடியாது
உன்னை கல்லெறிந்து கொல்ல ஏலவே எமக்கு அனுமதியுண்டு அறிந்து கொள்!
ஓடிவிடுங்கள் அம்மணமாக்குப்படுமுன்!!
-வபா பாறுக் Face Book
Comments
Post a comment