ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
-ரிம்சி ஜலீல்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தேற்றி சித்தியடைந்த குருநாகல்
மாவட்டம் தொடங்கஸ்லந்த தொகுதிக்குட்பட்ட தல்கஸ்பிடிய பிரதேசத்தில்
அமைந்துள்ள அல்-அஸ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 183 புள்ளிகளை
பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட செல்வன் அர்கம் நதீரை
பாராட்டி பரிசு வழங்கி வைப்பதற்காக வடமேல் மாகாண சபை உறுப்பினரும்
ஸ்ரீ.ல.மு.கா குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளர் றிஸ்வி ஜவஹர்ஷா நேற்று
(01) ம் திகதி அந்த மாணவரின் வீட்டுக்கு சென்று தனது வாழ்த்துக்களை
தெரிவித்து பரிசு வழங்கி கெளரவித்தார்.
இந்த நிகழ்வின் போது பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை நாம்
எந்தளவிற்கு பாராட்டுகின்றோமோ அதே போல அவர்களது எதிர்காலக் கல்விக்கும்
நாம் உற்சாகமளிக்கவேண்டும் அப்போதுதான் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு
சிறந்த புத்திஜீவியாக முடியும் என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார்.
Comments
Post a comment