எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
(நஸீஹா ஹஸன்)
கல்வித்துறை
வளர்ச்சிக்கு 35 வருடகாலம் பாரிய சேவையாற்றியமைக்காக மாவனல்லை பதுரியா
மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும், மெஸ்டா அச்சக நிறுவனத்தின்
தலைவருமான அல்ஹாஜ். எம்.ஜே.எம்.நயீமுடீன் ஆசிரியர் “மனித உரிமைக்கான
தேசமான்ய விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
‘மனித
உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பினால்’ நேற்று சனிக்கிழமை கொழும்பில்
அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்ட
இந்த விருது வழங்கும் நிகழ்விலேயே இவருக்கும் இந்த கௌரவ விருது,
எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கே.
துரைரெட்னசிங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
சுமார் 35
வருடங்களுக்கு மேலாக கல்வித்துறையில் பாரிய சேவையாற்றிய நயீமுதீன்
ஆசிரியர், 20 வருடங்கள் அதிபர் சேவையிலும் கடமையாற்றியிருந்தார். இறுதியாக
மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் அதிபராக சேவையாற்றியிருந்த இவர்,
அப்பாடசாலை தேசிய மட்டத்தில் பல சாதனைகளை நிகழ்த்துவதற்கும், சப்ரகமுவ
மாகாணத்தில் முன்னணி பாடசாலையாக தரம் உயர்த்துவற்கும் அளப்பரிய
சேவையாற்றியிருந்தார். 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்த ஓய்வு பெற்ற
பின்னரும் கல்வித்துறை சார்ந்த பல வேலைத்திட்டங்களை மாவனல்லை கல்வி
வலயத்தில் இவர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு
கல்வித்துறையில் பாரிய சேவையாற்றியமைக்காவே நயீமுடீன் ஆசிரியருக்கு “மனித
உரிமைக்கான தேசமான்ய விருது” வழங்கப்பட்டிருந்தது.
மனித
உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சரீக் மொஹமட் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும்,
ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம
அதிதியாக கலந்து கொண்டார். அதுதவிர, விசேட அதிதிகளாக தமிழ் தேசிய
கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.
துரைரெட்னசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே. மொஹமட்
லாஹிர், ஆர்.எம்.அன்வர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a comment