எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
கொழும்பு
5ல் அமைந்துள்ள ஹென்றி பெட்ரிஸ் மைதானம் நாளை முதல் இசிபதன கல்லூரி மாணவ
மாணவியர்களின் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக வழங்க, மாகாண சபைகள் மற்றும்
உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பயிஸர் முஸ்தபா, கொழும்பு மா
நகரசபை உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இன்று மாகாண சபைகள்
மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர்
இவ்வாறு தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் போது அமைச்சின் செயலாளர் கமல்
பத்மசிறி, நகரசபையின் பொருளாளர் கே,டீ. சித்ரபால, விளையாட்டு மற்றும்
பொழுதுபோக்கு துறை பணிப்பாளர் சலிக்க எஸ் ரணவீர ஆகியோர்களுடன் அமைச்சின்
உத்தியோகத்தர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், இசிபதன கல்லூரி அதிபர் மற்றும்
பழைய மாணவ சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.
இசிபதன
கல்லூரி அதிபர் மற்றும் பழைய மாணவர்கள் பிரதமரிடம் முன் வைத்த
கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்
ஆலோசனையின் கீழ் ஹென்றி பெட்ரிஸ் மைதானம் இசிபதன கல்லூரிக்கு வழங்க
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் பைசர் முஸ்தபா
தெரிவித்துள்ளார். இதன் போது கருத்து தெரிவித்த பாடசாலையின் அதிபர் கருத்து
தெரிவிக்கையில் இந்நிகழ்வானது 62 வருட காலத்திலும் கல்லூரிக்கு மைதானம்
ஒன்று கிடைப்பது வரலாற்று பதிவு என சுட்டிக்காட்டினார்.
எனவே
இதுவரைகாலமும் கொழும்பு மா நகரசபையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த
ஹென்றி பெட்ரிஸ் மைதானத்தின் நிர்வாகம், செயட்படுத்துதல் மற்றும்
அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் அனைத்தும் நகரசபை மற்றும் கல்லூரி
புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படியில் இரு சாராருக்கும் வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
4700
மாணவ மாணவிகள் கல்வி கட்கின்ற இக்கல்லூரியின் விளையாட்டு நடவடிக்கைகள்
வாடகை மைதானத்தில் முன்னெடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இலங்கை றக்பி
அணிக்கு 50% வீரர்கள் தெரிவானதி இக்கல்லூரி மாணவர்களே. இவ்வருடம்
நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான றக்பி போட்டியில் ஜனாதிபதி கிண்ணத்தை
சுவீகரித்தது இசிபதன கல்லூரி அதேபோன்று மைலோ கிண்ணத்தையும் வென்றுள்ளது. 19
வயதின் கீழ் இலங்கை கிரிக்கெட் அணியில் கல்லூரி மாணவர்கள் பங்குபெறுவதாக
பாடசாலையின் அதிபர் மேலும் தெளிவுபடுத்தினார்.
Comments
Post a comment