ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
ஐந்தாம்
தர புலமைப் பரிசில் பரீட்சையில் குருநாகல் தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா
வித்தியாலய மாணவன் அர்க்கம் நதீர் 183 புள்ளிகளைப் பெற்று குருநாகல்
மாவட்டத்தில் தமிழ் மொழி மூல மாணவர்களிடையே அதிகூடிய புள்ளிகளைப் பெற்று
முதலிடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
இவர் குருநாகல் தல்கஸ்பிடியைச் சேர்ந்த முஹம்மத் நதீர், உம்மு ரனீஸா தம்பதிகளின் செல்வப் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment