எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்ட ஆசிரிய
நியமனங்களின் போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு
வடக்கு மற்றும் மத்திய மாகாணம் போன்ற மாகாணங்களுக்கு
நியமித்துள்ளமை மிகப்பெரிய அநீதியாகும்.
அதிலும் திருமணம்
ஆகாத முஸ்லிம் பெண் ஆசிரியர்களை வேண்டுமென்று இனவாதத்தின்
அடிப்படையில் வேறு மாகாணங்களுக்கு நியமித்துள்ளதாகவே உலமா கட்சி
காண்கிறது.
நல்லாட்சியின் வெற்றிக்காக
98வீதம் வாக்களித்த கிழக்கு முஸ்லிம்களின் ஆசிரியர்களுக்கு அதுவும்
பெண்களுக்கு இப்படி நடந்துள்ளமை மிகப்பெரிய நன்றி கெட்ட
தனமாகும்.
ஆகவே அரசாங்கம் அவர்களை தமது சொந்த மாகாணங்களில் நியமிக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
Comments
Post a comment