எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
புனர்வாழ்வு
மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன்
தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் தென் கிழக்குப்
பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜும்மா பள்ளிவாயல் இன்று
வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையுடன் பல்கலைக்கழக நிர்வாகத்திடம்
உத்தியோகபூர்மாக கையளிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சரிடம்
முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில்
மேற்படி பள்ளிவாயல் நிர்மாணிக்ப்பட்டிருந்தது.
தென்கிழக்குப்
பல்கலைக்கழகத்துக்கு இன்று விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
பள்ளிவாயலை பல்கலைகழக நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்நிகழ்வில்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜி, ஹிரா
பௌண்டேஷன் செயலாளர் மும்தாஸ் மதனி, மௌலவி அலியார் பலாஹி, மௌலவி அமீன்
பலாஹி, முன்னாள் தவிசாளர் அஸ்பர் ஜே.பி. உட்பட பலரும் கலந்து கொண்டதோடு.
ஜும்மா உரையினை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அஷ்ஷைக் அலியார்
றியாதி நிகழ்த்தியிருந்தார்.
இப் பல்கலைக்கழகத்தின் நீண்ட நாள்
தேவையாக இருந்த இப் பள்ளிவாயலை நிர்மாணித்து தந்தமைக்கு இப்
பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் இமாணவர்கள் அனைவரும் ஹிரா
பெளன்டேசனுக்கு நன்றி தெரிவித்தனர்
Comments
Post a comment