எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
ஸ்ரீலங்கா
ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் இலவச உம்ரா பயணத்துக்கு தெரிவு
செய்யப்பட்டுள்ள இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான விமான பயணசீட்டுகள்
மற்றும் ஆவணங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹிரா பௌண்டேஷன் தலைவரும்,
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினா ல் கையளிக்கப்பட்டது.
நாடளாவிய
ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 55 வயதுக்கு மேற்பட்ட, ஹஜ் , உம்ரா கடமைகளை
நிறைவேற்றாத இமாம்கள் மற்றும் கதீப்மார்கள் 500 பேருக்கு இலவசமாக உம்ரா
செய்வதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் செய்துள்ளது.
ஏற்கனவே,
இத்திட்டத்தின் கீழ் 300 இமாம்கள் மற்றும் கதீப்மார்கள் மக்கா நகருக்கு
அனுப்பி வைக்கப்பட்;டனர். மீதமுள்ள 200 பேரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்
27ஆம் திகதி மற்றும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி என இரண்டு கட்டமாக அனுப்பி
வைக்கப்படவுள்ளனர். இவர்களுக்கான விமான பயணச்சீட்டு மற்றும் இதர ஆவணங்கள்
கையளிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி அல்மனார்
அர்ராஷீத் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஹிரா
பௌண்டேஷன் தலைவர், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஹிரா பௌண்டேஷன்
செயலாளர் நாயகம் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி, காழி நீதிபதி மௌலவி
எஸ்.எம்.அலியார் பலாஹி, பத்வா குழுத்தலைவர் ஏ.ஜி.எம்.அமீன் பலாஹி,
காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர்
பொறியியலாளர் ஏ.எம்.எம்.தௌபீக், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்
கே.எல்.எம்.பரீட் ஜே.பி, முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஜே.பி.
உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்
Comments
Post a comment