ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
(அஷ்ரப் ஏ சமத்)
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா்கள்
இன்று கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இவ் ஆசிரியா்கள் தொண்டா் ஆசிரியா்களாக நியமனம் பெற்றுவரும் ஆசிரியா்கள்
6ஆயிரம் ருபா சம்பளத்தை பெறுவதாகவும் தமக்கு சம்பளத்தை அதிகரிக்கும்
மாறும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனா். தாங்கள் 6ஆயிரம் ருபாவையே
பெறுகின்றோம். கடந்த வருடம் ஜூலை மாதம் தமக்கு 10ஆயிரம் ருபா தருவதாக
சென்ன அரசாங்கம் இதுவரை வழங்க வில்லை எனத் தெரிவித்து இன்று கொழும்பு
லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து ஜனாதிபதி அலுவலகம் வரை சென்றனா்.
அத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் மேலதிகச் செயலாளரை சந்தித்து தமது மனுவை
ஒப்படைத்தனா்.
Comments
Post a comment