ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
தியாகத் திருநாளில் இயன்றளவு
தியாகங்களைப் புரிவோம்;
-அமைச்சர் பைஸர் முஸ்தபா
அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இன்று ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இவ்வாறு, மாகாண சபைகள் மற்றும் உள்@ராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இஸ்லாத்தின் இறுதிக் கடமையின் பூர்த்தி விழாவாக அமைந்துள்ள ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் நாம், அதன் தத்துவங்களையும் மகிமைகளையும் அறிந்து, எமது வாழ்க்கையில் அதன் படிப்பினைகளை உணர்ந்து நடப்போமாக!
கால வெள்ளத்தால் அழியாத தியாக வரலாற்று நிகழ்ச்சியை நினைவுபடுத்தி, உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் ஒரு புண்ணிய நன் நாளாகத் திகழும் இப்பெருநாள் தினத்தில், சமூகத்தைச் சீர்படுத்த எவ்விதமான தியாகங்களையும் மேற்கொள்வதற்கு எம்மை மாற்றிக் கொள்வோமாக!
நபி இப்றாஹீம் (அலை), நபி இஸ்மாயில் (அலை) ஆகியோர்களது தியாகங்களை நினைவு கூர்ந்து, இவர்களின் வாழ்வின் அம்சங்கள் பற்றி அல்லாஹ் அருளியுள்ளவற்றை சீர்தூக்கிப் பார்த்து, அல்லாஹ்வுக்காக நாம் எதனையும் எப்பொழுதும் தியாகம் செய்யத்தயாராக இருப்பதற்கு முயற்சிப்போமாக! “எனது உடைமை-நான்” என்ற பெருமைக் குணம் போன்ற தன்னலத் தன்மையை நம்மிடமிருந்து களைந்து, எதையும் நாம் பிறருக்கு தாராளமாகக் கொடுத்துதவ முன் வருவோமாக!.
நாம் இன்று நல்லாட்சியொன்றின் கீழ் சுதந்திரமாகவும்இ சந்தோஷமாகவும்இ நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இந்த நிம்மதியும் சந்தோஷமும் நம் வாழ்நாளில் தொடர்ந்தும் நிலைத்து நீடிக்க வேண்டுமெனஇ இப் பெருநாள் தினத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போமாக!.
இன்று அல்லாஹ்வின் அருளால் குதூகலமாக பெருநாளைக் கொண்டாடுவதைப் போன்றுஇ எல்லா வருடங்களிலும் பெருநாளைக் கொண்டாடுவதற்கு அல்லாஹ் துணைபுரிய வேண்டும் என இந் நன்நாளில் பிரார்த்திப்போமாக!.
இதே வேளைஇ இப் பெருநாளை ஈமானிய உணர்வுகளோடு வரவேற்றுஇ இஸ்லாத்துடன் பின்னிப்பிணைந்த வாழ்க்கைக்கான திட்டத்தைத் தீட்ட இந் நன்நாளில் முனைவோமாக!.
ஒவ்வொரு ஆண்டும் மலரும் இப் பெருநாளின் போதும் இதனை நாம் நினைவு படுத்திஇ நமது வாழ்நாளில் உருவாகியிருக்கும் அத்தனை தீய செயல்களையும் விட்டும் ஒதுங்கிஇ புதியதொரு வாழ்க்கைப் பயணத்திற்கு நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்வோமாக!. பிறந்துள்ள இப்பெருநாளில்இ நம் மத்தியில் காணப்படும் சகல பிளவுகளையும்இ மனக் கசப்புகளையும்இ அடியோடு ஒழித்துஇ சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் கட்டியெழுப்பிஇ அல்லாஹ்வின் அருளால் இஸ்லாத்தின் இலட்சினையை உயர்த்திஇ இந்நன்நாளில் அல்லாஹ்விடம் இருகரமேந்தி பிரார்த்திப்போமாக!
(ஐ. ஏ. காதிர் கான்)
Comments
Post a comment