இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக
தென் கொரியாவை தளமாகக்கொண்ட பரலோக கலாசாரம் மற்றும் உலக சமாதானத்துக்கான அமைப்பின் சர்வதேச சமயத்தலைவர்களின் மாநாடு தென் கொரிய தலைநகர் சியோலில் கடந்த 17ந்திகதி முதல் நடந்து கொண்டிருக்கின்றது. 170 நாடுகளைச்சேர்ந்த உலகின் பல முக்கிய சமயங்களின் சமயத்தலைவர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் இலங்கையிலிருந்து பௌத்த மதத்தை பிரதிநிதித்துவ படுத்தி இத்தபான தம்மாலங்கார தேரரும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதும் கலந்து கொள்கின்றனர்.
உலகம் முழுவதும் யுத்தம் நீங்கி சமாதானம் எற்பட வேண்டுமென்பதற்காக மேற்படி அமைப்பு பல முயற்சிகளையும்; நடவடிக்கைகளையும் அதன் தலைவர் திரு. லீ அவர்களின் சிறந்த தலைமைத்துவம் மற்றும் வழி காட்டலின் கீழ் செயற்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அமைப்பின் சர்வதேச மாநாடு கடந்த 2014ல் நடைபெற்றதற்குப்பின் இந்த வருடம் வெகு விமர்சையாக நடை பெறுகிறது.
இந்த மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் சியோல் ஒலிம்பிக் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் மத்தியில் நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சுகல மதங்களும் சகல இனங்களும் சம உரிமை பெற்று சமாதானமாய் செயற்பட வேண்டும் என்ற இலக்கைக்கொண்டு மேற்படி அமைப்பு சர்வதேச ரீதியாக 170 நாடுகளில் கிளைகளை ஏற்படுத்தி செயற்படுகிறது. மேற்படி மாநாட்டில் உலமா கட்சித்தலைவர் கலந்து கொள்வதன் மூலம் இலங்கையின் உலமாக்கட்சிக்கென சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததாகவே அரசியல் அவதானிகளால் கருத்தக் கொள்ளப்படுகிறது.
Comments
Post a comment